அன்பான உறவுகளே…
கடந்த இருவாரங்களாக
தமிழக சூழல் மட்டுமல்ல உலக அளவில் நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது உலக இசுலாமிய
மக்களின் உணர்வு போராட்டம்….
இசுலாமியர்கள்
தங்கள் உயிரை விட மேலாக கருதும் முகமது நபியை அமெரிக்காவின் கைகூலி இசுரேலின் செல்லகுழந்தை
ஒன்று கேவலமாக சித்தரித்து திரைப்படம் எடுத்து உலக இசுலாமியர்களின் வெந்த புண்னில்
வேல்பாய்சியது.
உலக வல்லாதிக்க
அமெரிக்காவோ அவனின் ஆடாவடி செயலுக்கு வக்காலத்து வாங்கி தனது இசுலாமிய எதிர்ப்பை மீண்டும்
பதிவு செய்துள்ளது. உலக அளவில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், என்னை
வள நாடுகளை தனதுகைக்குள் வைத்துக்கொள்ள தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில்
இசுலாமிய நாடுகளை குறிவைத்து உலக பொது எதிரிகளாக இசுலாமிய மக்களை அடையாலம் காட்டும்
வகையில் தனது நச்சுகருத்துக்களை பரப்பியது ”இசுலாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல
ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் இசுலாமியர்களே” என்ற நச்சு விதையை பரப்பி உலக மக்களிடமிருந்து
இசுலாமியர்களை தனிமை படுத்தும் போக்கை கையாண்டு வரும் வேலையில் இப்படியான திரைபடத்தை
அமெரிக்க மன்னில் இருந்து ஒரு ஊடக பயங்கரவாதத்தை பரப்பும் பயங்கரவாதியாக செயல்பட்டு
இன்று உலக அளவில் ஒரு அமைதின்மையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இந்நச்சு
விதையை அமெரிக்காவின் கோர முகத்தை அம்பல படுத்தி தமிழக இசுலாமிய மக்கள் கொதிதொழுந்து வீதிகளில் எழுந்து
போராடினார்கள் அமெரிக்கா தூதரகம் இசுலாமிய
மக்களின்முற்றுக்கைகுள் முழுமையாக வந்தது.
அமெரிக்காவை எதிர்த்து
போராட்டமா..?
அமெரிக்கா தூதரகம்
மீது தாக்குதலா? என்ன நடக்கிறது தமிழகத்தில் உலகையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர
துடிக்கும் அமெரிகாவின் தூதர்களுக்கே பாதுகாப்பு இல்லையா..
இந்தியாவில் நமது
ஆட்சிதானே நடக்கிறது நமது அடிமைதானே அங்கே பிரதமர் இப்பதானே நாம் சொன்னதை எல்லாம் கேட்டு
அணு ஒப்பந்தம், அண்ணிய நேரடி முதலீடு என வால் ஆட்டும் நாய் போல் கேட்கும் அடிமை நாட்டில்
எப்படி நமக்கு எதிராக போராட்டம்.
யோசித்து யோசித்து
மண்டை பிளக்கும் தலைவலியோடு போடுடா போனை அந்த அடிமைகளுக்கு அவ்வளவு திமிரா யார் கொடுத்த
தைரியம் என டெல்லி அடிமைக்கு போன் போக தமிழகத்தில் என்ன நடக்கிறது ஒரு பக்கம் அணு உலைக்கு
எதிராக போராட்டம் இப்ப என்னான அமெரிக்காவுக்கு எதிரா போராட்டம் அதிலும் அணு உலைக்கு
எதிரா முஸ்லீம்கள் எல்லாம் போராடுகிறார்கள் அறிக்கை கொடு என தமிழகத்தின் குருநிலத்தை
ஆட்சி செய்யும் அல்லிராணியிடம் டெல்லி பேரரசு
போராட்டம் என்ற
ஒற்றை சொல்லை தனது ஆட்சிகாலத்தில் எங்கும் கேட்க கூடாது வெந்ததை தின்று விதி வந்தால்
சாகவேண்டும் தனது குரு நில அரசில் போராட்டமா..? அதுவும் தனது அரசின் தலைநகரிலா தன்னை
கோபித்து கொள்ளாதா? டெல்லி பேரரசு தனது ஏவல் படையை அணுப்பி அமெரிக்காவின் அடாவடி செயலை
கண்டித்து திரண்ட இசுலாமியர்களின் மண்டையை பதம் பார்திருக்கிறது அல்லி ராணியின் ஆடாவடி
படை
தமிழகத்தில் முன்
எப்போழுதும் இல்லாத அளவிற்கு தமிழக இசுலாமிய மக்கள் பொது கோரிக்கையின் பக்கம் கவனம்
செலுத்த ஆரம்பித்தார்கள் கடந்த ஆறுமாத காலமாக தமிழக சிறைகளில் வாடி வரும் இசுலாமிய
சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் செப்.15 அண்ணா பிறந்த தினத்தில்
விடுதலை செய்ய கோரி பொது சமுகத்தோடு இனைந்து போராடினார்கள் ஆனால் இந்த அரசுக்கு எம்
மக்களின் கோரிக்கை சிறு அளவுகூட எட்டவில்லை அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி இன்று
வரை அரசு அதற்கு எவ்வித பதிலும் கூறாதநிலைதான் இருந்து வருகிறது.
அடுத்து கூடங்குளம்
அணு உலைக்கு எதிராகவும் அணு உலைக்கு எதிராக போராடும் இடிந்த கரை மக்களின் மீதான அரசவண்முறையை
எதிர்த்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் இசுலாமிய அமைப்புகள் முன்னேடுத்து பெரும்
எழுச்சியை ஏற்படுத்தினார்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரை மக்களின்
தனி போராட்டம் அல்ல அது ஒட்டுமொத்த மக்களின் போராட்டம் என்ற உணர்வில் இசுலாமிய மக்களும்
அதன் இயக்கங்களும் முன்னேடுத்து செல்ல இந்திய தமிழக அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை
ஏற்படுத்திய வேலையில் திடீர் என்று தமிழக கியூ பிரிவால் திருச்சியில் முஸ்லீம் பயங்கரவாதி
! கைது செய்யப்பட்டார் இந்தியாவில், தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு அரசியல் நெருக்கடி
ஏற்பட்டால் உடனே தீவிரவாதிகள் கைது செய்யப்படுவார்கள். அதை ஊடகங்களும் தங்களின் கற்பனை
கதைகளை கலந்து விதவிதமாக செய்திகள் போட்டு தங்கள் பங்கிற்கு பிரச்சனையை திசை திருப்பும்
வேலையை நன்கு செய்யும். ஆட்சியாளர்களே உங்கள் அரசுகளை காப்பாற்றிக்கொள்ள பலியாடுகள்
முஸ்லீம்கள்தானா என்ற கேள்வியை ஒவ்வொரு இசுலாமியன் மனதிலும் நெருடிக்கொண்டிருக்கும்
விடயமாகும்.
கூடங்குளம் போராட்டத்தை
நசுக்க முற்படும் அரச பயங்கரவாதம் இன்று தமிழக இசுலாமிய மக்களுக்கு எதிராக லத்தியை
திருப்பி இருக்கிறது பல்லாயிரகணக்கான மக்கள் கூடிய ஆர்பாட்டத்தில் கொடுரமாக தடியடி
நடத்தி பல இசுலாமியர்களின் மண்டையை பிளந்து பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அணுமதிக்கப்பட்டுள்ளார்கள் தடியடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுரங்கபாதையில் சென்ற
மக்களை சுரங்கபாதையில் வைத்து அடித்து இன்னொரு ஜாலியன் வாலாபாக்கை தமிழக காவல்துறை
நடத்திக்காட்டியது.
தமிழக அரசே…!
காவல்துறையே…!
போராடும் இசுலாமியர்களை
தடிகொண்டு அடக்கநினைக்காதே..
மக்களின் மேல்
விழும் ஒவ்வொரு அடியும் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் உங்கள் ஆராஜக ஆட்சியின் இருதிகாலத்தை
நோக்கி என்பதை புரிந்துகொள்வீர்கள்.
No comments:
Post a Comment