Sunday 13 November 2011

இட்ட சாபம் முட்டுகிறது






இட்ட சாபம் முட்டுகிறது



கனிமொழியின் பிணை மனுவை சி.பி.ஜ நீதிமன்றம் மீண்டும் நிரகரித்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 437ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் தான் பெண் என்பதாலும் மாநிலங்களவை உறுப்பினர் என்பதலும் பிணை வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார் அந்தபிணை மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. கலைஞர் மிகவும் உடைந்துபோனார் ஆனாலும் காங்கிரசுடன் கூட்டனி நீடிக்கும் என்று அறிவித்தார். கலைஞர் நிலைமை வடிவேல் படத்தில் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரெம்ப நல்லவன்னு சொல்லராங்கஎன்ற நிலையில் போய் கொண்டு இருக்கிறது. சரி விசயத்துக்கு வருவோம்.

கனிமொழிக்கு சட்டப்படி பிணை வழங்கவேண்டும் அது அவருக்கு இந்திய அரசியல் சட்டம்? (வெங்காயம்) இன்னும் இருக்கும் சட்டங்கள் எல்லாம் வழங்கியுள்ள உரிமைகள் அது அவருக்கும் பொருந்தும் அவரது பிணை மனு தள்ளுபடியால் வருந்திக்கொண்டு இருக்கும் கனிமொழியின் தந்தையோடு நாமும் சேர்ந்து வருந்துவோம்.

கலைஞரின் செல்ல மகள் இவர் பிறந்த ராசிதான் அவர் ஆட்சி கட்டிலில் ஏற காரணமாக இருந்தது என்ற பகுத்தறிவுக்கே சவால் விடும் அளவிற்கு பாசமாக வளர்ந்த கனிமொழி ஊழல் வழக்கில் இந்திய வல்லாதிக்கத்தின் மையமாம் டெல்லியில் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

கனிமொழி சிறையிலிருப்பது பற்றி குறிப்பிடும் போது நேற்று பூத்த ரோசாவான என் மகள் உடம்பில் வெயிலால் கொப்பளங்கள் வந்து வாடுகிறாள் என்று வருந்துகிறார் நாமும் ஒரு தந்தையாக இருந்து வருந்துவோம்.

(கொத்து குண்டுகளாலும், ரசாயன குண்டுகளாலும் உடம்பு முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு துடிதுடிக்க செத்த எம் ஈழ மக்கள் பற்றி உங்களுக்கு நினைவு வந்தால் நான் பொருப்பல்ல!)

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?
10 ஆண்டுகளாக மக்களுக்கு வாரி வாரி வழங்கினோமே (தன் மக்களுக்கும்தான்) (யாரப்பா அது! உங்கப்பன் வூட்டு பணமா? னு கேட்கிறது) அவர் அறிவிக்காத இலவசங்களே இல்லை!
ஒரு திருமணம் செய்தால் இன்னொரு திருமணம் என்ற இலவசம் தவிர!!
 ஏன் மக்கள் என்னை முழுமையாக தூக்கி எரிந்தார்கள் என்று காரணம் தேடும் இளைஞரே...

தமிழினத்தின் தானை தலைவன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு மக்கள் வரிப்பணத்தில் செம்மொழி மாநாடு என்ற கனிமொழி மாநாடு நடத்தி, காசு கொடுத்து பதவி கொடுத்து தனது அல்லக்கை கவிஞனை எல்லாம் கூட்டி வந்து கவிதை என்ற பெயரில் உங்களுக்கு முதுகு சொரிந்த கூத்தை அரங்கேற்றி தமிழனுக்கும் தமிழுக்கும் எதுவும் செய்யாததால் தான் இப்படி நடந்திருக்குமோ?

டெல்லியில் காங்கிரசு வல்லாதிக்கத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்காய் நீங்கள் வீர சமர் புரிந்து கொண்டிருப்பதாக நாங்களெல்லாம் என்னியிருக்க நீங்களோ டெல்லிகாரனிடம் மந்திரிபதவிகளுக்காய் மடிப்பிச்சை ஏந்தியிருக்க பின்பு கோபமாய் நீங்கள் திரும்பியதை பார்த்து நாங்கள் புல்லரித்து போய் பார்த்து கொண்டிருக்க பிறகு தான் தெரிந்தது பதவி பேரம் படியாததால் நீங்கள் திரும்பினீர்கள் என்று உங்கள் கோபத்தை பதவிக்காக காட்டியதில் சிறு அளவேனும் இனத்திற்காய் காட்டியிருந்தால் காங்கிரசுகாரன் இன்று உங்களை இப்படி பழிவாங்கியிருப்பானா?
அதனால் தான் இப்படிஎல்லாம் நடக்கிறதோ??

2009ல் ஈழதேசம் முழுவதும் ரத்தவாடையும் எங்கள் உறவுகள் கழுகுக்கும் நாய்களுக்கும் இரையாகி கொண்டு இருக்கும் போது
சிங்கள வெறியர்களோடு உங்கள் இத்தாலி காங்கிரசின் பழிதீர்க்கும் வெறியால் எங்கள் ஈழ உறவுகளை அழித்துக்கொண்டு இருக்கும் போது  ஈழத்தில் போரை நிறுத்தக்கோரி தமிழகமே எழுச்சி கொண்டபோது வழக்கம் போல் உங்கள் தந்திர வேலைகளை காட்டினீர்கள். முதலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்றீர்கள்! பின்பு மத்திய அரசை புரிந்து கொண்டேன் என்றீர்கள்!  உலக கமொடியாக கின்னஸில் இடம்பிடித்த காலை உணவுக்கு பிறகு மதிய உணவு நேரம் வரை மட்டுமே நீடித்த உண்ணாவிரத நாடகம்!. சட்டமன்ற வெற்றுத்தீர்மாணங்கள்! பின்பு புற முதுகு காட்டி மருத்துவமனையில் படுத்துகொண்டும், உங்கள் உண்ணாவிரத நாடகத்தால் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்ற அறிவிப்பை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியில் வந்த மிச்சபேரும் மடிந்தார்களே! நீங்களும், மிசை இல்லாத தமிழன் சிதம்பரமும் போட்ட நாடகத்தில் எங்கள் உறவுகள் படுகொலை செய்யப்பட்டார்களே? அந்த காரணமாக இருக்குமோ!

எங்கள் செந்தமிழ் நாட்டில் இவனைபோல் அறிவிற்சிறந்த ஒரு மாவீரன் இனி எப்போழுது கிடைப்பானோ என்று எங்களை ஏங்க வைக்கும் முத்துக்குமார் துடிதுடித்து உயிரிழக்கும் போது கூட உங்களையும், ஈழ மக்களுக்காக போராடத இனத் துரோகிகளையும் தோழுரித்துக் காட்டிவிட்டு செத்துப்போனானே அதனால் இருக்குமோ?

 10ஆண்டுகளாய் ஆட்சியில் இருந்தும் 20வருடங்களாய் தூக்குமர நிழலில் இருந்துவரும் மூன்று தமிழ் பிள்ளைகளின் தூக்கு கயிற்றை அறுத்து எரிய எதுவும் செய்யாமல், தன் மகனின் அல்லகைகள் என்ற ஒரேதகுதிகாக  தண்டனை குறைப்பு செய்து அவர்களுக்கு மட்டும் சலுகை காட்டி விடுதலை செய்த நீங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை முடித்த இஸ்லாமிய சிறைவாசிகள் கால கிரகத்தில் அடைக்கப்பட்டு அவர்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று ஆதரவு இல்லாமல் அழைகிறதே? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் அதில் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டிய உங்கள் துரோகத்தினால் இப்படி நடந்திருக்குமோ..?

உங்கள் துரோகத்தால் வீழ்ந்த ஈழத்தில் உங்கள் மகள் வயதுடைய எங்கள் இசைபிரியாக்கள் மண்னிழந்து மானமிழந்து துடிதுடித்து சாகும்போது உங்கள் துரோகத்திற்கு எதிராக அறம் பாடியிருந்தாலும் பாடியிருப்பார்கள்...

எங்கள் தேசத்து வீர புலவன் என் பாட்டன் பெரிஞ்சித்திரனார் அப்படித்தான் ஒருநாள் இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் எங்கள் ஈழ தெருக்களில் சமாதனம் பேசவந்தவன் எங்கள் தமிழர்களின் இரத்தம் குடித்ததையும் எங்கள் வீர தமிழச்சிகளின் மானம் அறுத்ததையும் கண்டு மனம் வெதும்பி அறம்பாடினான். அதன்படி 1991 மே 21 சம்பவம் ஈழ மக்களுக்கு எதிரான இந்திய கொடுமைக்கு ரத்த சாட்சியாய் ஆனது..

இனி...
மடிந்த எங்கள் ஈழமக்கள் 1.50.000.பேர்கள் கடைசி நேர மரணப் போராட்டத்தில் பாடிய அறத்தால் இன்னும்
எத்தனை துரோகங்கள் வீழுமோ..!  
 
உமர்கயான் சே.
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம்.

Thursday 1 September 2011

தமிழக மீனவர்கள் படுகொலையும் இஸ்லாமிய இயக்கங்கள் பார்வையும்





கேட்க வேண்டிய கேள்வியும்..! உதவாத பதிலும்...!

ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலையை எதிர்க்கும் இஸ்லாமிய இயக்கங்களை சீண்டிய உணர்வு பத்திரிக்கை தமிழக மீனவர்களின் வாழ்வாதார உயிர்பிரச்சனையில் தனது விசமத்தனத்தை காட்டி உள்ளது.

ஜீலை 22-28 ம் தேதியிட்ட உணர்வு..? (http://www.tntj.net/44055.html) பத்திரிக்கையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த அபூ ராஜியா என்ற வாசகர் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து தவ்ஹித் ஜமாத் களம் இறங்காதது ஏன்?”  என்று ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.
இது கேட்கவேண்டிய கேள்வி 

(சகோதரர் அபூராஜியா கேள்வியை இப்படி கேட்டிருக்களாம்
தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள கடற்படையால் அடிக்கடி கொல்லப்படுவதை எதிர்த்து களம் இறங்காதது ஏன்?)

இப்படி கேட்டவுடன் உறைத்து உடனே போராட்டம் நடத்த புறப்பட்டு விடுவார்கள் என்று யாரும் என்னிவிட வேண்டாம்
இலங்கை அரசுக்கு எதிராக சிறு அசைவும் இஸ்லாமிய மக்களிடம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவணமாக இருப்பவர்கள் இவர்கள்.

சரி உதவாத பதிலைப்பார்போம்.

ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம்.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு குட்டி நாடு. இந்தியாவுடன் மோதிப்பார்க்க அந்த நாட்டுக்குப் பலமோ துணிவோ கிடையாது. இந்திய மீனவர்களைச் சட்ட விரோதமாகப் புகுந்து பிடித்துச் செல்லும் வலிமையோ இலங்கை அரசுக்குக் கிடையாது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொண்டால் தான் தமிழ் மொழியைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரின் போலித்தனம் புரியும்.
(ஏங்க பாய் அந்த ஓட்டுப்பொறுக்கிகளோடு கடந்ததேர்தலில் உங்கள் தவ்ஹித் ஜமாத்தும் அவர்களோடு பொறுக்கப்போனதே?)

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை கிராமங்களில் இந்தூவா நச்சு கருத்துக்களை பரப்பிவிட்டு அது வளர துனைநின்று அமைதியாக சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த இரு சமுக மக்களிடையே பிளவை ஏற்படுத்திய கொலைகார மோடியின் கூட்டளியாக இருந்து வந்து தற்போது பாபர்மசூதியை இடிக்க காரணமான, 1919முதல் இந்திய முஸ்லீம்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறித்து, சச்சார்பரிந்துரைகளை கூட இதுவரை செயல்படுத்தாத, மத்திய அரசில் இடஓதுக்கீடு தராத, ஈழத்தமிழ் மக்கள் 1,50,000 ம் மக்கள் சாக காரணமான காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திருநாவுக்கரசருக்கு ஆதரவாக உங்கள் மாநில நிர்வாகிகள் கொலைகார கை சின்னம் கொண்ட கொடி ஒரு புறம் உங்கள் தவ்ஹீத்ஜமாத் கொடி ஒருபுறம் கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தது ஏனோ இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

அதையேல்லாம் நான் கிளரவில்லை  ஆனால் நீங்கள் ஏன் சில விசயங்களை வசதியாக மறந்து (அ) மறைத்து வாசகர்களுக்கும், தமிழக முஸ்லீம்களுக்கும் தவறான செய்தியை பதிவு செய்கிறீர்கள் என்றே தெரியவில்லை.

இலங்கை குட்டி நாடு என்றாலும் இந்தியாவைப்பற்றி என்றைக்கும் அலட்டிக் கொண்டது கிடையாது.
இன்றைக்கும் தனது நேச நாடாக சீனா, பாகிஸ்த்தான், பங்களதேசம், இஸ்ரேல் ஆகியவற்றை கருதிவருகிறது.
இந்தியா தான் மாணங்கெட்டு வடிவேல் பானியில் நானும் நன்பன், நானும் நன்பன் என்று வலிந்து உதவிசெய்து வருகிறது.

வரலாற்றையும் பூகோளத்தையும் உணர்வு பத்திரிக்கை மூலம் நமக்கு புரியவைக்க முயற்ச்சி செய்வதை விட்டு விட்டு (ஏன் என்றால் உங்களுக்கு புரியிதா? வெளங்குதா? என்று அடிக்கடி  அண்ணன் கேப்பாரு, எங்களுக்கு நீங்க பேசரது என்னிக்குமே புரியாது) மன்மோகன் சிங்கிடமும், ராஜபக்சேவிடமும் உடனே உங்க யோசனைய சொன்னிங்கனா எங்க தமிழ்நாட்டு மீனவன் இனிமேலும் சாக மாட்டான்)

கேட்ப்பவன் கேணப்பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியுது என்பானாம்
நீங்கள் சொல்லரதுக்கு எல்லாம் தலையாட்ட தமிழக முஸ்லீம்கள் ஒன்றும் தமிழக வரலாறும், மீனவர்கள் பிரச்சனையும் பற்றி தெரியாத மக்கள் அல்ல.
  1. எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை எல்லாம் சிங்கள கடற்படை கைது செய்கிறதா? கொல்கிறதா?
  2. இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டினால் இந்திய கடற்படை அந்த மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறதா?
  3. பாகிஸ்த்தான் மீனவர்கள் எல்லை தாண்டினால்?
  4. மற்ற நாடுகளில் எல்லை தாண்டும் மீனவர்களை அந்த நாடுகள் என்ன செய்கிறது?
  5. தமிழக மீனவர்கள் உண்மையிலே எல்லை தாண்டும் போதுதான் கொல்லப்படுகிறார்களா?
இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளது
 முதலில் தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையின் தாக்குதல், படுகொலை,கைதுக்கான மூலத்தைப்பார்ப்போம்.

கச்சத்தீவு
கச்சத்தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீட்டரும்.
யாழ்ப்பானத்தில் இருந்து 18.கி.மீட்டர் தொலைவில் உள்ளது.சுமார்
280ஏக்கர் பரப்பளவு கொண்டது.
கச்சத்தீவு பகுதி முதலில் பச்சைதீவு என்று அழைக்கப்பட்டது
1882ஆம் ஆண்டு 8தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்கு சொந்தமாக இருந்ததாகவும். கிழக்கிந்திய கம்பெனி ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவை ராமநாதபுரம் சேதுபதியிடம் குத்தகைக்கு வாங்கினார்கள் எனவும்,
பின்பு இந்தியாவின் போலி சுதந்திரத்திற்க்கு பிறகு இலங்கை கச்சத்திவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கு ராணுவபயிற்ச்சிக்கான தளமாக மாற்றும் முயற்ச்சியில் 1956ம் ஆண்டு முயற்சி செய்ய தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட கும்பகர்ணனைப்போல் இந்திய நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை
விவாதிக்கப்பட்டது.

தமிழக மக்களின், தமிழக மீனவர்களின் விருப்பத்திற்க்கு மாறாக
இந்திய இலங்கைக்கு இடையிலான கச்சத்தீவு ஒப்பந்த்தின் மூலம் 28.6.1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக்கொடுத்தது. போனால் போகட்டும் என்று அந்த ஒப்பந்தத்தின் 5வது சரத்தில் தமிழகமீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீண்பிடித்துக்கொள்ளும் உரிமையும்,வளைகளை காயவைதுக்கொள்வதும், கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலையத்தில் வழிபாடு நடத்திக்கொள்ளும் உரிமையையும் ஒப்பந்தத்தில் வழிவகைசெய்தது.

இந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்ததா?

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்ப்பட்ட நாளில் இருந்தே ஒப்பந்த சரத்துகளை இலங்கை மீறி எம் தமிழக மீனவ சொந்தங்கள் மீது
தாக்குதல் நடத்திவருகிறது. இவர்கள் முழு பூசினியை சோற்றில்
மறைப்பதை போன்று எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எதோ வெறும் கைது செய்து அழைத்து சென்று பின்பு விடுவிக்கப்படுகிறார்கள் என்ற தோற்றத்தை தமிழக முஸ்லீம் மக்களிடம் ஏற்படுத்தப்பார்க்கிறார்கள்.
இதுவரை 540 க்கும் மேற்ப்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை வெறி நாய்கள்களால் படுகொலை செய்யப்பட்டும்,
கடுமையான சித்திரவதைகள், சொல்ல நாகூசும் வகையில் வக்கிரமாண சித்திரவதைகளை கேட்டால் மாணமுள்ள எவனும் அவர்களுக்காக போராடுவானே தவிர சிங்கள வெறியனுக்கு வக்காலத்து வாங்க மாட்டான்.
சிங்கள கடற்படை வெறிநாய்களால் குதறப்பட்ட எம் தமிழக மீனவர்கள் இன்றைக்கும் முடமாகி. பலகோடிக்கணக்கான சொத்துக்கள் இழந்து நிற்பதை தமிழக கடற்கரை கிரமங்களுக்கு
ஒருமுறை போய் அந்தமக்களிடம் நீங்கள் எல்லை தாண்டியதால் தான் சிங்கள கடற்படை உங்களை கைது செய்கிறது என்று கூறிப்பாருங்கள். அந்த மக்கள் எங்கள் மீனவன் தருவான் அதற்க்கு பதில்.

எங்கள் மீனவன் மீதான சிங்கள அரசின் வன்முறைக்கு எதிராக இங்கு ஆட்சியில் இருக்கும் எவனும் ஒரு மயிரையும் புடுங்கியது
இல்லை. ஒவ்வொரு முறை எம் மீனவன் கொல்லப்படும் போதும் முதல் தகவல் அறிக்கை பதியப்படும் ஆனால் இதுவரை அந்த முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரனை நடத்தி கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் ஆனால் துப்பு கெட்ட தமிழக ஆட்சியாளர்கள், இந்திய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
ஆனால் சிங்கள கடற்படையின் எங்கள் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்தால் என்ன விளைவு?

மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான எதிர்பியக்கங்கள்

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்ப்படை ஒவ்வொறு முறையும் தாக்குதல் நடத்தும் போதும் தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்,
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஏன் காங்கிரஸ்காரண் கூட பொருக்க முடியாமல் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில் எங்கள் மீனவன் எத்தனைபேர் பாதிக்கப்பட்டனோ என்ற பதைபதைப்பு தோன்றுகிறது.

540 மீனவர்கள் கொல்லப்பட்ட போது துடிக்காத அரசுகள் சிங்கள கடற்படை வெறிநாய்களை எதிர்த்து வீதிக்கு வந்தவுடன் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்று(போங்கடா நீங்களும் உங்கள் இந்தியாவும்) சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகப்புச்சட்டம், தோழர் கொளத்தூர்மணி, அய்யா மணியரசன் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம்.  தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறது ஆனாலும் இதுவரை இந்திய அரசு கண்டு கொள்ளவிள்ளை இலங்கயும் தாக்குதளை நிருத்தவில்லை.
ஒரு நாடு தனது குடிமக்கள் மீது அந்நிய நாடு தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டை எதிர்க்கவேண்டும் ஆனால் இந்தியா தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் முதல் மீனவன் கொல்லப்பட்டபோதே சிங்கள வெறிநாய்களை வேட்டையாடி இருந்தால் 500க்கும் மேற்ப்பட்டமீனவர்கள் வீட்டில் இழவு விழுந்திருக்காது. இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவிள்ளையே அதனால் தானே நாங்கள் போராடுகிறோம்.
நீங்கள் போராடுவது எல்லாம் ஜெயிக்கிற போராட்டம் நாங்கள் போராடுவது எல்லாம் வெத்துப் போராட்டமா?
இலங்கையை ஒன்றும் பன்னமுடியாதாமாம்?
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தான் அதனால் சுட்டோம் என்று தைரியமாக கூறுங்கள் சர்வதேச சட்டங்கள் படி இந்தியா உங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று இலங்கைக்கு மேலும் எம் தமிழக மீனவனை கொல்ல அலோசனை கொடுக்கிறது உணர்வு பத்திரிக்கை.
(இலங்கையை பார்த்து இவர்கள் கூறுகிறார்கள் என்ன பாஸ் 1,50,000 ம் பேரை கொன்று சரித்திரத்தில் இடம் புடுச்சிறிக்கிறிங்க, சர்வதேசத்துக்கே சவால் விடரிங்க. அய். நாவுக்கே ஆப்பு வெச்ச நீங்க தமிழ்நாட்டுல வெறும் பயலுக எதாவது கத்திக்கிட்டே இருப்பானுக பாசு எல்லை தாண்டி வந்தான் எலங்க இறையாண்மைக்கு ஆபத்துனு எதவது காரணம் சொல்லி சும்ம பொட்டு பொட்டுனு போட்டுகிட்டே இருங்க பாசு எவனாவது பேசினா நாங்கலெம் இருக்கோம்ல சும்ம விட்டுருவமா?)

தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையிலும், கச்சத்தீவுப்பகுதியிலும், ஏன் ராமேஸ்வரம் வரை விரட்டி வந்து தாக்கியதாக கூறியதை தமிழகத்தில் உள்ள அணைத்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் செய்திவந்ததே?
யார் கொடுத்த துனிச்சல் அந்த சிங்கள வெறி நாய்களுக்கு. உங்களைபோன்ற மனிதாபிமாணம் இல்லதவர்களும், கையாளாக இந்திய அரசுமே காரணம்.

எங்கள் மீனவர்கள் தாக்கப்படுகிறார்களே என்று போராடினால்
போலிப்போராட்டம் என்று கொச்சைப்படுத்துவதா?

மீனவர்கள் தாக்கப்பட்டாலும் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கான போராட்டம் என்றாலும், அனைத்துமக்களின்
வாழ்வாதார பிரச்சனைகள் என்றாலும் பொதுவான போராட்டங்களுக்காக தமிழகத்தில் உள்ள எந்த இஸ்லாமிய அமைப்புகளாவது வீதிக்கு வந்தது உண்டா..?
எவனாவது போராடி, சிறை சென்று, செத்துப்போய், அடிவாங்கி
உரிமைகளை பெற்றுக்கொடுத்தால் அதைமட்டும் அனுபவித்துக்கொண்டு குளு குளு அறையில் உட்கார்ந்துகொண்டு
போலிப் போராட்டம் என்று விமர்சனம் செய்வீர்கள்.
உங்களுக்கு எங்கே பிரச்சனை என்று எங்களால் புரிந்து கொல்ல முடிகிறது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ம.ம.க தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியவுடன் உங்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது.

இஸ்லாமிய தலைவர்கள் என்ற போர்வையில் தமிழக இஸ்லாமிய மக்களை பொதுச்சிந்தனையோட்டத்தில் இருந்து திசைமாற்றி ஒரு தலைமுறை இஸ்லாமிய மக்களை சுய தேவைகளுக்காக மட்டுமே சிந்திக்க தூண்டியும், பொதுத்தேவைகளுக்கான போராட்ட திசைவழியில் இருந்து துண்டித்து, பரந்து பட்ட மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி
இந்தூவா சக்திகள் எம் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பதை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். இதுவே உங்களுக்கும் இந்தூவா சக்திகளுக்கும் பொது வேலைத்திட்டமாக இருக்கிறது.
உங்கள் பானியில் எத்தனைப் போலிப் போராட்டங்கள் நடத்தினாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு கண்டு கொள்வதுமில்லை, இலங்கை அரசு தாக்குதலை நிறுத்துவதுமில்லை.

2011ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான நேரத்தில் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியிலில் இந்தியாவும் இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதி இலங்கை தோற்றது. ஊருக்கு இழிச்சவாயனாக இருந்த தமிழக மீனவர்கள் மீது கிரிக்கெட்டில் தோற்ற ஆத்திரத்தை இலங்கை இவர்கள் மேல் காட்டியது, விளைவு தமிழக மீனவன் படுகொலை செய்யப்பட்டான். (என்னங்கடா நாடு இது?)
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது வெளியில் தெரிந்தால் தோற்றுவிடுவோம் என்று பயந்து சுயநலத்திற்க்காக (நீங்கள் ஆதரித்தும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த) தி.மு.க. அரசும், இத்தாலி காங்கிரசும் கூட்டு களவாணியாக எங்கள் தமிழக மீனவன் செத்ததைக்கூட வெளியில் விடாமலும் அவர்கள் சாவுக்குகூட ஓ என்று கதறி அழக்கூட தடைபோட்ட அயோக்கியத்தனத்தை ஏன் வசதியாக முஸ்லீம் மக்களிடம் மறைக்கிறீர்கள்.

தமிழக மீனவர்கள் தினம் தினம் அவர்களின் வாழ்வாதரத்திற்க்காக கடல்வெளியில் போராடிக்கொண்டு இருக்கும்போது அவர்களை கொல்லும் சிங்கள கடற்ப்படையின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் பிரச்சாரமாக உங்கள் குரலும் ஒலிக்கிறதே? யாரை திருப்திப்படுத்த இந்த பதில்.
தமிழ்நாட்டில் தமிழைவைத்தோ, தமிழர்களின் பினங்களை வைத்தோ பிளைப்பதற்க்கு இங்கு போராடும் போராளிகள் ஒன்றும் கருணாநிதியிம் அல்ல கனிமொழியும் அல்ல. இங்கு தமிழனின் உரிமைகளுக்காக போராடினால் பிளைக்க முடியாது. இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு ஆபத்து என்று அடக்குமுறைகளும், சிறைதண்டனைகளும் தான் பரிசாக கிடைக்கும்.

அன்பு இஸ்லாமிய உறவுகளே..
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதால் தான் பிரச்சனை என்று கூறுவது உன்மையா? என்றால் இல்லை பக்கத்து பகை நாட்டுக்காரன் என்ற பாகிஸ்தான் கூட தவறுதலாக எல்லை தாண்டினால் கைது செய்து விட்டு விடுகிறான். உலகம் முழுவதும் மீனவர்கள் எல்லைதாண்டினால் அவர்களை எச்சரிப்பதும் அல்லது சட்டப்படி கைது செய்து வழக்கு போடுவதுமே நடந்து வருகிறது.  ஆனால் இலங்கை மட்டும் இன வெறி கொண்டு சர்வதேச கடல் எல்லை பகுதியிலும், கச்சத்தீவு அருகிலும் மீண்பிடித்துக்கொண்டு இருக்கும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்ப்படையால் தாக்குகிறார்கள் அல்லது கொல்கிறார்கள், ஏன் சில சமயம் இந்திய கடல் எல்லை வரை துரத்திவந்து தாக்கிய சம்பவங்களும் உண்டு உண்மை இவ்வாறு இருக்க உண்மைக்கு புறம்பாக எதோ தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி போவது போலவும் அதனால் தான் கைது செய்யப் படுகிறார்கள் என்று பதில் கொடுப்பது யாரைக் காப்பாற்ற என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
(தவறியும் இவர்கள் மீனவர்கள் கொல்லப்பட்டதையும், சித்திரவதைக்கு ஆளானதையும் தங்கள் பதிலில் கவனமாக தவிர்த்துக் கொண்டதை அந்த பத்திரிக்கையை படிப்பவர்களுக்கு புரியும்) (http://rasminmisc.blogspot.com/2011/07/blog-post_21.html)

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இவர்கள் கண்டிக்க கூட வேண்டாம் பாதிக்கப்பட்ட அந்தமக்களின் வெந்த புண்னில் வேல் பாய்ச்சாமல் இருந்தாலே போதும்.

தமிழக இஸ்லாமிய மக்களே..
  • தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையின் கொலைவெறி தாக்குதல்களை எதிர்த்துப்போராடுவோம்..!
  • இதுவரை கொல்லப்பட்ட மீனவர்கள் கொலைக்காக சிங்கள கடற்படையின் மீது கொலை வழக்கு பதியப்பட்டு உரிய விசாரனை நடத்தி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோருவோம்..!
  • பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நமது உருதியான அதரவை கூறுவோம்.
  • தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்கப்போராடுவோம்..!
  • தமிழக கடல்வெளியில் நமது மீண் பிடிக்கும் உரிமைகளை நிலைநாட்டுவோம்..!
  • தமிழக கடற்ப்பரப்பில் இலங்கையோடு சீனாவின் அச்சுறுத்தலுக்கும் எதிராக போராடுவோம்..!
  • நமது தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இருக்கும் நமது சமுதாய துரோகிகளை இனம் காண்போம்..!

உமர்கயான்.சே
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள். தமிழ்நாடு   







Tuesday 16 August 2011

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்


இஸ்லாமிய நன்பர்கள் குழு சகோதரர்களுக்கும் குழுவின் நிறுவுனர் சகோதரர் முபாரஸ் அலிக்கும்
அன்புசகோதரர்களே...
ஈழத்தில் நடந்த ஒரு மனித படுகொலைகளை கண்டித்தும்,மரணதண்டனைக்கு எதிராக நமது குழுவில் பதிவிட்டால் அதற்க்கு எதிர்கருத்து இருந்தால் ஆரோக்கியாமான அழகியமுறையில் பதில் கூறவேண்டும் அதைவிட்டு மிக இழிவாக முஸ்லீம் பெயரில் ஒருவர் பதிவிட்டு வருகிறார். அவர் உன்மையான முஸ்லீம் என்றால்
அவர் இஸ்லாமிய அடிப்படையில் இருந்து பதிவிடுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா..?
அவரின் மோசமான கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடா?
 நான் ஆரோக்கியமான எந்த விவாதங்களுக்கும் எப்போழுதும் தயார்.
குழுவில் உள்ள நன்பர்களே
 நீங்களும் மொளனமாக இருப்பதைப்பார்த்தால் அந்த நபரின் கருத்துக்களை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் என்றே என்னத்தோன்றுகிறது.
   வரம்புமீறி பேசும் மேற்கண்ட நபரை என்னாலும் வரம்புமீறி
பேசமுடியும்.ஆனாலும்
என்னை எப்படி இழிவு படுத்தினாலும் சிங்கள கொலை வெறி ராணுவத்தால் 1,50,000மக்கள் கொல்லப்பட்டதையும் ஒரு அநீதியான போரில் பாதிக்கப்பட்ட அப்பாவிமக்களின் பக்கமிருந்து
பேசுவேன் பேசிக்கொண்டே இருப்பேன்.
ஈழத்தில் மட்டும் அல்ல உலகில் எங்கு அநீதி நடந்தாலும் பேசுவேன், எழுதுவேன்.
எனது மார்க்கம் அநீதிகளுக்கு எதிராக அது எவன் என்றாலும்
எதிர்க்க கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனது சமுதாயம் பாதிக்கப்பட்டால் மட்டும் குரல் கொடுக்கும்
சுயநலவாதி அல்ல
திருக்குரான் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
அது உலக மக்களுக்கும் பெதுவானது
இவர்களைபோல உள்ளவர்களின் நிழையால் நமது சகோதர சமுதய மக்களிடம் அன்னியமாகிவருகிறோம்.
அன்பு சகோதரர்களே..
நாம் நமது உரிமைகளுக்காக போராடும் அதே வேலையில்
மற்றமக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம்..!
நாம் நமது என்ற நிலையில் இருந்து அனைத்து மக்களோடும்
இனைவோம்...!
பெதுவான போராட்டங்களில் நமது பங்களிப்பை உறுதிசெய்வோம்...!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக அனிதிரளுங்கள்..!
அப்சல்குரு,பேரறிவளன்,முருகன்,சாந்தன் உள்ளிட்டவர்களின்
தூக்கு தண்டணைக்கு எதிராக அனிதிரளுங்கள்...

உமர்கயான்.சே
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள். தமிழ்நாடு

Tuesday 9 August 2011

தமிழகத்தில் ஈழமக்களுக்காக மாண்ட முதல் மாவீரன். அப்துல்ரவுப்

அன்பு உறவுகளே..

1995ம் ஆண்டு ஈழமக்களின் துயர்கண்டு துடித்தான் ஒரு இளைஞன் ஈழமக்கள் தினம் தினம் செத்துமடியும்போது ஆசியவிளையாட்டுபோட்டியில்விளையாட சிங்களகாடையர்களை
எம்தமிழக மன்னில் கால்பதிக்க அனுமதிக்கமாட்டோம்
தாய் தமிழகமே சிங்களகாடையர்களுக்கு எதிராக அனிதிரளுங்கள்
என்றும் ஈழமக்களை காப்பற்றுங்கள் என்று பெரம்பலூர் வீதியில்
தனதுதேக்குமரதேகத்தில் தீவைத்து மாண்டான் ஒரு இளைஞன்
அவன் தான்அப்துல்ரவுப் தமிழகத்தில் ஈழமக்களுக்காக மாண்ட
முதல் மாவீரன். அப்துல்ரவுப்பின்வாழ்வை ஆவனப்படுத்தும்
முயற்சியில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள்
இயக்கம்.தமிழ்நாடு. ஈடுபட்டுள்ளது.

அன்பு தாய் தமிழக.மற்றும் புலத்தில் வாழும் உறவுகளே..
உங்களிடம் அப்துல்ரவுப்பற்றிய செய்திகள்
புகைப்படங்கள், அப்துல்ரவுப்பின் நன்பர்கள்பற்றிய தரவுகள்.
இப்படி எதுவாக இருந்தாலும் கீழ் கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அறியப்படுத்தவும்.  நன்றி
                           
                                                                                                                      உமர்கயான்.சே
                                                                                                                        வழக்கறிஞர்
                           இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள்இயக்கம்
                                                                                                                             தமிழ்நாடு
                                                                                                                   bbm.tup@gmail.com
                                                                                                        umar@bbmlawassociates.com
                                                                                                              umar.cs@rediffmail.com
                                                                                                              tamilumar.bolgspot.com
                                                                                                                    +919488159091

Tuesday 2 August 2011

ஈழ இனப்படுகொலைகளும் இஸ்லாமிய இயக்கங்களின் பார்வையும் (மனித நேயப்பார்வை?)

ஜூலை 8ம் தேதியிட்ட உணர்வு பத்திரிக்கையின் விளம்பர சுவரொட்டிகளில் "இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் செய்யும் தமிழக இயக்கங்கள்” என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்தது அந்தப் பத்திரிக்கையின் நீதி, நேர்மை பற்றி தெரிந்ததால் நாம் எப்போழுதும் வாங்கிப் படிப்பதில்லை. இருப்பினும் என்னதான் துரோகம் இழைக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம் என்று நண்பர் "ஒடிக்கி" ஜாபரிடம் வாங்கிப் பார்த்தால் தமிழக முஸ்லீம் மக்களை இருகூறாக்கிய அமைப்பின் இலங்கை கிளையின் சார்பாக வெளிவரும் ஒரு வலைதளத்தில (www.rasminmisc.blogspot.com) வெளியிடப்பட்ட "இலங்கை முஸ்லீம்களின் பிரச்சனையை ஊறுகாயாக்க வேண்டாம் தமிழக அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரையை உணர்வில் பதிப்பித்து உள்ளார்கள் (என்ன! ஒரு சமுகநோக்கு என்று கட்டுரையை படிப்பவர்களுக்குப் புரியும்)

உணர்வு வெளியிட்ட கட்டுரைக்கும் தற்போது நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வேறு விசயம்.

அன்பு இஸ்லாமிய உறவுகளே....

முதலில் நாம் இங்கே ஒன்றை தெளிவுபடுத்திவிட்டு மேற்படி கட்டுரை(கதைக்கு) விரிவான பதில்களைப் பார்ப்போம்..

புலிகளாக இருந்தாலும் எவராக இருந்தாலும் அப்பாவி மக்கள், பெண்கள், நிராயுதபாணிகள், குழந்தைகளைக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் கண்டிக்கின்றோம். நீங்கள் சொன்னமாதிரி, சொன்னவிதத்தில் இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டு இருந்தால் கண்டிப்போம் இதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை.

ஆனால் உறவுகளே...

உலகத்தில் யூதர்களை மிஞ்சமுடியாது பிரித்தாள்வதிலும், சூழ்ச்சி புரிவதிலும் என்பார்கள். அவர்களே செய்யமுடியாத ஒன்று உண்டு என்றால் அது இஸ்லாமியர்களுக்குள் பிளவை ஏற்படுத்த முடியாதது.

ஆனால் இன்று முஸ்லீம்களுக்குள் மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களை பல கூறுபோட்டு தந்தைக்கு எதிராக மகனையும், மகனுக்கு எதிராக தந்தையையும் யூதர்கள் செய்யமுடியாத ஒரு குழப்பத்தை இஸ்லாமிய மக்களின் ஒரு சிறு பிரிவினர் இடையே செய்து வருகின்றனர். இன்று ஈழத் தமிழ் மக்கள் மீது நாஜி இட்லர்கூட செய்யாத ஒரு இன அழிப்புப்போரை 7 நாடுகள் துணையுடன் ரத்தவெறியன் ராஜபக்சே செய்தான் என்பது உலகில் மனிதநேயம் கொண்ட அனைவருக்கும் தெரியும். ஆனால் 8வது நபராக எனது இஸ்லாமிய சமுகத்தில் இருக்கும் ஒரு சில நயவஞ்சக சிங்களக் கைக்கூலிகள் திரைமறைவாக ஈழத்தில் நடந்த இன அழிப்புப்போரில் உள்ளார்களோ என்று தற்போது எண்ணத்தோன்றுகிறது.

ஏன் என்றால் மேற்கண்ட தளத்தில் எழுதியவர்கள் நோக்கமும், அதை வெளியிட்ட உணர்வு பத்திரிக்கையின் நோக்கமும் மறைமுகமாக அல்ல வெளிப்படையாக நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. மேற்கண்ட கட்டுரையின் நோக்கம்தான் என்ன?

காத்தான்குடியில் பள்ளிவாசல் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்;
1992ல் வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றினார்கள்;
கிழக்கில் முஸ்லீம்கள் மீது தாக்குதல்;
கிழக்கில் கருணா தலைமையில் முஸ்லீகள் மீது தாக்குதல்.

இப்படி பட்டியலிடும் கட்டுரையாளர் கூறுகிறார்

“இப்படி பட்டியல் போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் போடுமளவுக்கு துரோகங்களை இழைத்தவர்கள் தான் இந்த விடுதலைப்புலித் தீவிரவாதிகள்” (ஏன் பாய் அமெரிக்கவும் இந்துத்துவவாதிகளும் உங்களையும் இஸ்லாமியர்களையும் அகிம்சாவாதிகள் என்றா சொல்றாங்க?)

நீங்க என்னதான் சொல்ல வர்றீங்கனு ஒருத்தனுக்கும் புரியல. யாருக்கும் எதுவும் புரிய கூடாதுங்கறதுதானே நீங்க இவ்வளவு கஷ்டப்படறீங்க...

சரி நீங்க சொல்கிற மாதிரியே நடந்திருந்தால் நாம் கண்டிப்போம். ஆனால் இந்தக் கட்டுரை மூலம் நீங்கள் சொல்ல வருபவை என்ன?

இறுதிப்போரில் முழுமையாக புலிகளை (உங்கள் பார்வையில் புலித்தீவிரவாதிகளை) ஒழித்து விட்டதாக உங்கள் இலங்கை இனவெறி அரசே கூறுகிறதே..! அப்படி இருக்க இன்று இனப்படுகொலையால் வீடு இழந்து மகன், மகள், கணவன் என அனைத்தையும் இழந்து முள்வேலி முகாம்களில் வாடிக்கொண்டு இருக்கும் எனது மனித உறவுகளான அனைவரையும் இன்னும் புலிகள் என்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்றும் மீதம் இருக்கும் எம் மக்களையும் அழிக்கவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?

உலகில் எங்கும் நடைபெறாத ஒரு மனிதப்பேரழிவு நடந்துள்ளதே, மனிதநேய மார்க்கத்தை கை கொண்டு இருக்கும் இஸ்லாமிய சமூகமும் அதன் இயக்கங்களும் அதை எதிர்க்கவேண்டியது கடமை அல்லவா?

இலங்கை இனவெறி அரசை எதிர்த்து இங்கே ஒரு சில எதிர்ப்பியக்கங்கள் நடந்து வருவதை சமூகநோக்கிலும் இஸ்லாமிய பார்வையிலும் வரவேற்பதைவிட்டு விட்டு ஓர் இனமே அழிந்து, மிச்சம் இருக்கும் மக்களும் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும்போது யாரை திருப்திப்படுத்த இந்த கட்டுரை?

மனிதகுலப் பேரழிவின் காரணகர்த்தா ராஜபக்சேவின் குரலாக உங்கள் குரலும் ஒலிக்கிறதே! என்ன வேதனை! அங்கே பாதிக்கப்பட்ட ஈழமக்களுக்காக இங்கு இருக்கும் முஸ்லீம் அமைப்புகள் குரல் கொடுத்தால் (எல்லா அமைப்புகளும், அனைத்து இஸ்லாமியர்களும் குரல்கொடுப்பதில்லை என்பது வெட்கமே) இலங்கை முஸ்லீம்களுக்கு எப்படி துரோகம் ஆகும்..? உணர்வு பத்திரிக்கை விளக்க வேண்டும்.

நீங்கள் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்ட தமிழக இஸ்லாமிய மக்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல.. 1,50,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டதை வரவேற்று முஸ்லீம்களைக் கொன்றதற்கு பலிவாங்கிவிட்டோம் என்று இங்கு இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லீம் மக்களும் ஆனந்தப்படவேண்டும் என்று கூறுகிறீர்களா? அதைத்தான் இறைவேதமும், நபிகள் நாயகமும்(ஸல்) கற்றுக்கொடுத்ததா?

நாங்கள் கற்றுக்கொண்டது எல்லாம் மனிதகுலம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். அவர்கள் நிறத்தால், மொழியால், இனத்தால் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்பது தான்.

நீங்கள் கூறுவது (சும்மாதானே?) போலும், திரு குரான் கூறுவது போலும் ஆதாமின் மக்கள்தான் அனைவரும் என்றால், ஈழத்தில் இனப் படுகொலையில் மாண்ட 1,50,000 மக்கள் யாருடைய மக்கள்? அவர்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா.? நீங்கள் மாற்றிப் பேசுகிறீர்களா? இல்லை குரானுக்கு மாற்றமாகப் பேசுகிறீர்களா?

இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்று பேசுபவர்களே..!

ஈழத்தில் என் சகோதரிகள், என் தாய்மார்கள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி நிர்வாண கோலத்தில் கொல்லப்பட்டதையும், குழந்தைகள், அப்பாவிமக்கள் கொல்லப்பட்டதையும், எம் இளையவர்களை நிர்வாணப்படுத்தி கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பின்மண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதையும் சேனல்4 தொலைகாட்சி ஒளிபரப்பியதே... இதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரும் பார்த்து கண்ணீர் வடிக்கும்போது உங்கள் கண்களை மட்டும் மறைத்தது எது..?

உணர்வு பத்திரிக்கை தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்ட கட்டுரையில் ஒரு புகைப்படம் உள்ளது (சுட்டி: http://issuu.com/qatartowheed/docs/unarvu_45)

அந்தப் புகைப்படத்தில் இலங்கை இனவெறி அரசின் அச்சாணியாக இருக்கும் புத்தமத இனவெறி சாமியார்களிடம், ஒப்பந்த கையெழுத்திடும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் உள்ளனர். (அப்படி என்றால் யாருடைய அரிப்பிற்கு இவர்கள் சொறிகிறார்கள் என்று இப்பொழுது நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறதா?)

மனிதகுல வரலாறு முழுவதுமே விடுதலைப்போராட்டங்கள் தீவிரவாதமென்றும், பயங்கரவாதமென்றும் தூற்றப்பட்டுத்தான் வருகிறது.

கட்டுரையாளர் கூறுகிறார்

"தங்கள் உடன் பிறந்த சகோதரர்களாய்ப் பழகிய இஸ்லாமிய சமுதாயத்தை கருப்புக் கண்ணாடி கொண்டு பார்த்தார்கள் விடுதலைப் புலிகள். தங்கள் போராட்டம் நியாயமானது என்றிருந்தால் அந்த போராட்டத்தில் முஸ்லீம்களும் கண்டிப்பாக பங்கெடுத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானதாகவோ ஒரு கோரிக்கையை முன்னிருத்தியதாகவோ இருக்கவில்லை. தனி ஈழம் என்று அவர்கள் முன் வைத்த வாதம் கூட போலியானதுதான். ஒரு சிலரின் சுய விருப்பு வெறுப்புக்காக ஓராயிரம் தமிழ் சகோதரர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது.”

தமிழீழ போராட்டக் களத்தில் முஸ்லீம்கள் பங்குபெறவில்லை என்று பச்சைப் பொய் பேசும் நியாயவான்களே! ஈழ விடுதலைப் போராட்டத்தில் எத்தனை எத்தனை முஸ்லீம் போராளிகள், தளபதிகள் களப்பலியானார்கள் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? உங்கள் இனவெறி சிங்களக் கூட்டாளிகள் கோபித்துகொள்வார்கள் என்பதாலா.? ஈழப்போராட்டத்தில் என்ன நியாயமின்மையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்?

ஈழ விடுதலைப்போராட்டத்தில் முதல் முஸ்லீம் மாவீரர் லெப்.கேணல். ஜீனைதீன் ஆவார். அது போல பல ஆண்டுகள் அகிம்சை முறையில் போராடிய ஈழத்து காந்தி என்று போற்றப்படுகிற தந்தை செல்வா தலைமையில் சம உரிமை, அதிகாரப்பகிர்வு என்று சாத்வீகமாகத்தானே நடந்தது. சிங்கள அரசு அதை காதில் வாங்காமல் போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கினார்களே! தரப்படுத்துதல் என்ற கொள்கையில் தமிழ்மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதே! இப்படியான ஒடுக்குமுறைகளுக்கு பின்புதான் வரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இனி சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்றும் தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு பின்பு தான் ஆயுதம் தாங்கிய போராட்டங்களும் நடந்தது என்ற வரலாற்றை கட்டுரையாளர் தமிழக இஸ்லாமிய மக்களுக்கு மறைத்த நோக்கம் என்ன?

உங்கள் அண்டப்புழுகுகளை ஏற்றுக்கொள்ள நீங்கள் மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் கூட்டம் அல்ல நாங்கள்.

1983 ஆண்டு ஜூலை கலவரத்தில் எத்தனை தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள்! இங்கே தமிழன் கறி விற்கப்படும் என்று போர்டு மாட்டிய கொடுமை எந்த நாட்டிலாவது நடந்தது உண்டா? பிஞ்சுக் குழந்தைகளை கொதிக்கும் தார் டின்னில் போட்ட கொடுமையைப் பற்றி எங்கள் தமிழக இஸ்லாமிய மக்களிடம் கூறும் நேர்மை உங்களிடம் உண்டா..?

செம்மணி புதைகுழிக்கும், கற்பழிக்கப்பட்ட எனது சகோதரிகளுக்கும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று வீடு திரும்பாத எனது சகோதரனை பிணமாகவாவது பார்ப்போமா என்று காத்திருக்கும் எனது அன்னைக்கும் என்ன பதில் கூறுகிறீர்கள்?

ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதன் நியாயத்தை புரிந்து கொண்டு நாட்டின் விடுதலைக்காய் ஆண்களும், பெண்களும் களப்பலியான வரலாற்றை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் கூட்டமே... சூரியனை கைகள் கொண்டு மறைக்கமுடியாது. வரலாற்றை படைப்பவர்கள் மக்கள்! உங்களின் பொய்களும் புரட்டுகளும் தொடர்ந்தால் வரலாற்றில் இருந்து மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள்.

ஐ.நா.சபை அமைத்த நிபுணர்குழு இலங்கையில் நடந்தது போர்க்குற்றமே என்று அறிக்கை கொடுத்துள்ள நிலையில், உலகம் முழுவதும் இலங்கை அரசுக்கு நெருக்கடி வந்த சூழ்நிலையில் தங்களது விசுவாசத்தைக் காட்டவும் தமிழகத்தில் ஈழத்தமிழ்மக்களுக்கு ஆதரவாக ராஜபக்சேவுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களை திசைதிருப்பவே மேற்கண்ட கட்டுரை என்பது நமக்குப் புரிகிறது. (பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதை இஸ்லாம் ஹராமாக்கிவிட்டதா.? என்ன ஒரு மனிதநேயம்!)

இலங்கை முஸ்லீம்களுக்கு புலிகள் அநீதி இழைத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக உலகமறிய நடந்த படுகொலைக்கு எதிராகப் போராடவேண்டாம் என்று இஸ்லாம் கூறுவதாக குரான், ஹதீஸ் ஒளியில் நிரூபிக்க நீங்கள் தயாரா?

நீங்கள் எழுதிய கட்டுரையும் அதை குதர்க்கமாக வெளியிட்ட உணர்வு பத்திரிக்கையும் இக்கட்டுரை மூலம் என்ன செய்தி சொல்லவருகிறது? இனப்படுகொலையை நாங்கள் ஆதரிக்கிறோம். தமிழக முஸ்லீம்களும் அமைப்புகளும் இனப்படுகொலையைப் பற்றி பேசக்கூடாது என்றுதானே அதன் அர்த்தம்.

அப்படிப் பேசினால் துரோகமென்றும், மார்க்கவிரோதிகளென்றும் தூற்றுவீர்கள். அன்று நடந்த சம்பவங்களுக்காக அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் மனிதநேயம் எல்லை கடந்து போய்விட்டது.

மேலும் அக்கட்டுரையில் தொடர்கிறது...

"இலங்கை முஸ்லீம்களுக்காக நாம் அறிந்த வகையில் பகிரங்கமாக போராடிய ஒரே இஸ்லாமிய அமைப்பு அப்போதைய தமுமுக. இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் அமைப்பாளர்கள் அன்றைய தமுமுகவின் அமைப்பாளர்களாக இருந்த நேரத்தில் இலங்கை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார்கள். ஆனால் இன்றைய தமுமுகவினதும் தமிழக இஸ்லாமிய அமைப்புகளினதும் நிலை அதுவல்ல. இவர்களின் இன்றைய நிலையைப் பற்றி நினைக்கும்போது எந்த ஒரு இலங்கை முஸ்லிம் சகோதரனினாலும் தாங்கிக் கொள்ள முடியாது. ஓட்டுக்காக சொந்த சமுதாயத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாக இப்போதைய தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்”

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை எதிர்த்து ஒரு சிறு முணுமுணுப்பு கூட கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக, தங்கள் எஜமான விசுவாசத்தை காண்பிக்கிறார்கள்.

அன்பு இஸ்லாமிய உறவுகளே...

நம்மைப் பொருத்தவரையில் இலங்கை தமிழ்மக்களைப் பற்றியும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தை பற்றியும் இவர்களைப் போன்றவர்கள் தவறான தகவல்களைக் கூறி நம்மை முட்டாள்களாக்கியதோடு, இப்போது நம் சகோதர, சகோதரிகள் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக்கூட துரோகமென்கிறார்கள்.

2009 மே மாதம் நடந்த இறுதிப்போரிற்குப் பிறகு சர்வதேச அளவில் மக்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக அணிதிரண்டதின் ஒரு பகுதியாக தமிழகமே எழுச்சிகொண்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய சில இஸ்லாமிய அமைப்புகள் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்தார்கள். அவர்களில் மிக முக்கியமாக மேற்கண்ட குழப்பவாதிகளே எதிர்பார்க்காத அளவிற்கு த.மு.மு.க., மனித நேயமக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இஸ்லாமிய மனித நேயவாதிகள் வீதிக்குவந்தவுடன் தனிப்பட்ட முறையில் மேற்கண்ட அமைப்புகளை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவே எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமலேயே பிதற்றுகிறார்கள்.

மனித நேயமக்கள் கட்சியும், த.மு.மு.கவும், இந்திய தஹீத்  ஜமாஅத்தும் ஈழத்தில் அப்பாவிமக்களும், பெண்களும், குழந்தைகளும் ஒரு அநீதியான போரில் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்று உணர்ந்து, போரில் அப்பாவிகள் நிராயுதபாணிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் என்றுமே ஆதரிக்காத ஒன்று என்ற இஸ்லாமிய அடிப்படையில் எழுச்சிமிகுபோராட்டங்கள் நடத்தினால், அம்மக்களுக்கு ஆதரவு கொடுத்தால் உங்களுக்கு எங்கே எரிகிறது?

நீங்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா..? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்...

நீதிமன்றத்தில் வழக்கு நிழுவையில் இருக்கும்போது எந்தநாட்டிலும் நடக்காத ஒரு அரசியல் கூத்தை தி.மு.க.வினர் நடத்தினார்கள். 'வாய்தாராணி' என்று ஜெயலலிதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தி.மு.க.வின் தற்போதைய தொங்கு சதையான (நாளை யாருடனோ) மேற்படி ஆட்கள் தங்கள் சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இருக்குமொரு பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறவர்கள். தங்களது சொந்த சமுதாய மக்களுக்கு எதிராக துப்பாக்கி தூக்குபவர்கள் (ஏங்க பாய் முஸ்லீம்களுக்குள் பிரச்சனை வந்தால் குரான், ஹதிது அடிப்படையில் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பீர்களே எத்தனை ஜீம்மாபயானில் பேசி இருப்பீர்கள்..? ஊருக்குத்தான் உபதேசமா) இன்று ஈழமக்களுக்காக ம.ம.க.வும், தமு.மு.கவும் ஒரு கொடுமைக்கு எதிராக வீதிக்கு வந்ததை தாங்க முடியாமல் குய்யோமுய்யோ என்று கதறுகிறார்கள்.

எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று கூறிக்கொண்டே தேர்தலுக்கு தேர்தல் மாற்றி மாற்றி இவருக்கு ஆதரவு, அவருக்கு ஆதரவு என்று, இஸ்லாமிய மக்களே சென்னையில் கூடுங்கள், மதுரையில் கூடுங்கள், தஞ்சை திணறட்டும், மயிலாடுதுறை ஆடட்டும் என்று கூப்பிடுபவர்கள் நம்மை அடகு வைத்தவுடன் (அதாங்க தேர்தல்) நீ சுன்னத்ஜமாத், நாங்கள் வேறு ஜமாதென்று சொந்த சகோதரர்களுக்கு எதிராக இருக்கும் உங்களைவிட இந்தநாட்டில் இம் மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும், அனைத்து சமுக மக்களிடமும் நல்லுணர்வோடு இருக்கவேண்டும் என்றும், அரசியல் அதிகாரம் இல்லாத வஞ்சிக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்ற அடிப்படையிலும் சமுக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காய் அரசியல் களம் காணும் ம.ம.கவைப் பாராட்டுகிறோம்.

தங்கள் சொந்த சமுதாய நலன்களை மட்டும் பார்க்காமல் அனைத்து மக்களுக்காகவும் போராட வேண்டும் என்ற பரந்த சமூக நோக்கிற்காகவும், ஈழத்தில் நடந்து முடிந்த இனஒழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் த.மு.மு.க. மற்றும் ம.ம.கவை நாங்கள் மனதாரப் பாராட்டுகின்றோம்

உங்களைபோல எத்தனை பொய்யர்கள் வந்தாலும் இந்தப் போராட்டங்களை திசை திருப்பமுடியாது. சரி நீங்கள் ஈழத்தமிழனுக்குத் தான் எதிரானவர்கள். இந்தியத் தமிழன் எங்கள் தமிழக மீனவன் சிங்கள கடற்படையால் தினம் தினம் கொல்லப்படுகிறானே, அவனுக்கு ஆதரவாக நீங்களும் உங்கள் தமிழகத்து தலைமை ஏஜண்டுகளும் என்றாவது போராடியது உண்டா..?

உங்கள் சுயலாபத்திற்காக மட்டுமே வீதிக்கு வரும் நீங்கள், என் மீனவ சொந்தங்களுக்காக ம.ம.க. மற்றும் த.மு.மு.க. சகோதரர்கள் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தினால் துரோகம் என்பதா? மனித நேயமே இல்லாத நீங்கள் பாதிப்புக்கு உள்ளான இலங்கை தமிழ்மக்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகப் போராடும் ம.ம.க, த.மு.மு.க., மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் பற்றி விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை.

மேலும் கட்டுரையாளர் கூறுகிறார்...

“ஓட்டுக்காக சொந்த சமுதாயத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாக இப்போதைய தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.”

தமிழக இஸ்லாமிய அமைப்புகள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை எதிர்ப்பது சொந்த சமுதாயத்திற்கு எப்படி வேட்டு என்பதை கட்டுரையாளரும் உணர்வு பத்திரிக்கையும் விளக்கவேண்டும். நீங்கள்தான் அடிப்படை மனிதாபிமானம் இன்றி இருக்கிறீர்கள் என்பதற்காக ஒட்டுமொத்த சமுதாயம் அப்படி இருக்காது. இந்த நாட்டில் விலங்குகள் பாதிக்கப்பட்டாலே போராடுகிறார்களே, இலங்கையில் பாதிக்கப்பட்டது எங்கள் மனித உறவுகள் அல்லவா? சக மனிதன் துன்பப்படும்போது பார்த்துக் கொண்டிருப்பது மனிதமில்லை; நீங்கள் மனிதன் இல்லையா..?

முள்ளிவாய்க்காலின் துயரத்தை கட்டுரை எப்படி கொச்சைப்படுத்துகிறது?

"நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் விடுதலைத் தீவிரவாதிகளுக்காக பந்தி போட்டுத் திரியும் சீமானுடன் கூட்டணி. முள்ளிவாய்க்கால் பிரச்சினை என்ற பெயரில் புலி ஆதரவாளர்களுடன் கூட்டணி.”

யாரை தீவிரவாதி என்கிறீர்கள்? மக்கள் விடுதலைக்காக போராடும் போராளிகளை அரசுகளும், உங்களைப் போன்ற அடிவருடிகளும் தீவிரவாதிகள் எனலாம். இப்படி காட்டிக் கொடுத்து வாழ்வதை விட மக்கள் விடுதலைகாய் ஒருநாள் வாழ்ந்தாலும் அது தான் வாழ்க்கை என்போம். (ஏன் பாய் ஈழவிடுதலைப் போராட்டத்தை, போராளிகளை சிங்களவர்களோடு சேர்ந்து காட்டிக் கொடுத்தாக ஒரு பேச்சு உள்ளதே, காட்டிக் கொடுப்பவன் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றாலும் தப்புதானே..?)

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எப்பொழுதும் சிங்கள அரசுகளுக்கு அடிவருடியாகத்தானே இருந்து வருகிறது. என்றாவது தமிழர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தது உண்டா..? (ஏங்க பாய் நாங்க கேள்விப்பட்டது உண்மையா? ஈழமக்களை காட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் கருணாவை சிங்கள அரசிடம் கூட்டிப் போய்விட்டது இலங்கையில் இருக்கும் ஒரு முஸ்லீம் முக்கியப் பிரமுகர்தான் என்பது..?)

தமிழகத்தில் அனைத்து மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி சிங்கள வெறிநாய்களால் குதறப்பட்ட அந்த மக்களுக்காகவும் போராடி வருகிறது அவர்களுடன் இணைந்து ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு எதிராகப் போராடுபவர்களை கொச்சைப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடும் நடந்த போர்க் குற்றத்தை எங்கே தமிழக முஸ்லீம்கள் புரிந்துகொண்டு ஒன்றுசேர்ந்து வீதிக்கு வந்து இலங்கை அரசுக்கு எதிராக போராடி விடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் உங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டுவது எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டபோரில் ஒட்டுமொத்த தமிழ்ச்சசோதரர்களும், கொத்துக்குண்டுகளால், குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று குவியல் குவியலாக கொன்றுபோட்டதே சிங்கள ராணுவம்! பாதுகாப்பு வளையப்பகுதி என்று அதற்குள் வரச்சொல்லி பாதுகாப்பு வளையப்பகுதிமீது உலகளவில் தடை செய்யப்பட்ட ராசாயன குண்டுகள் போட்டு முள்ளிவாய்க்கால் பகுதியை சிங்களராணுவம் சுடுகாடாக்கியதே.. வெள்ளைக் கொடி ஏந்திவந்தவர்களை போர்மரபுகளை மீறி கொன்றுபோட்ட அநியாயம் நடந்ததே.. நீங்கள் கொச்சைப்படுத்துவதற்கு எங்கள் அப்பாவி தமிழ்ச்சகோதரர்கள் பிணங்கள் தான் கிடைத்ததா..?

முள்ளிவாய்கால் துயரம், மனிதநேயமே இல்லாத உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஏன் என்றால் ஒரு மனிதக்கூட்டத்தின் பெரும்பகுதிமக்கள் கொல்லப்பட்டதையும் அதற்கு எதிராக குரல்கொடுப்பதையும் துரோகம் என்று நினைக்கும் உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்..!

ஈழத்தில் அப்பாவி மக்களுக்காக போராடுகிறவர்களைப் பார்த்து இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் என்பவர்களே… உங்களது தமிழகத்து தலைமை ஏஜண்டுகளிடம் சில கேள்விகள் நீங்கள் கேட்கவேண்டும்..?

“யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை” என்பது எங்கள் தமிழ்நாட்டு பழமொழி.

1997ம் ஆண்டு தமிழகத்து கோயமுத்தூரில் நடந்த இஸ்லாமிய மக்கள் மீது இந்துத்துவவாதிகளாலும், இன்றைக்கு இவர்கள் சொம்பு தூக்கிக்கொண்டிருக்கும் அன்றைக்கு ஆட்சியில் இருந்த தமிழகத்து கருணா(நிதி)யின் போலிசாலும் 19 அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்களே, அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதே இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதிகளென்று வீடு வீடாகப் புகுந்து கைதுசெய்யப்பட்டார்களே…

சோதனை என்ற பெயரில் படுக்கை அறைவரை கருணாநிதியின் போலீஸ் வெறியாட்டம் போட்டதே… பள்ளிவாசல் சோதனை, மதரஸாக்கள் சோதனை, சோதனைச்சாவடி என்று போர் நடக்கும் பகுதி போல் கோவையை வைத்திருந்த கருணா, கோகுலகிருஸ்ணன் கமிசன் என்ற தலையாட்டி கமிசனை அமைத்து அந்த கமிசன் மூலம் கலவரத்திற்குக் காரணம் முஸ்லீம்கள் தான் என்று அறிக்கை கொடுக்கச் சொன்ன கருணா...

இன்று வரை 19 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எவ்வித ஆறுதலும், நியாயமும் வழங்காத கருணா... பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்காத கருணா... அப்போது நடந்த தேர்தலில் 19 முஸ்லீம் ஜனாஸாக்கள் தாண்டியா கருணாவுக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட நீங்கள் இன்றும் கருணாநிதிக்கு சொம்பு தூக்கிக் கொண்டு இருப்பது கோவை முஸ்லீம்களுக்கு செய்யும் துரோகம் என்று வைத்துக்கொள்ளலாமா?

இந்த நாட்டில் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் கொஞ்சமா? முஸ்லீம்களுக்கு எதிராக பல இடங்களில் கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் தானே நடந்தது. இந்த காங்கிரஸ் களவாணிகள் ஆட்சியில் தானே 1992ல் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. எம் தமிழக மீனவர்கள் சிங்கள வெறிநாய்களால் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இந்த காங்கிரஸ் தானே.... அப்படிப்பட்ட காங்கிரசுக்கு தேர்தலில் ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்தது இந்திய முஸ்லீம்களுக்கு துரோகமா.? நன்மையா..?

முஸ்லீம்களுக்கு கருணாவும், காங்கிரசும் செய்த துரோகத்திற்காய் என்றாவது அவர்கள் வருந்தியதுண்டா..? எந்த வகையில் நீங்கள் அந்தக் கும்பலை ஆதரிக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா? உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ம.ம.கவையும், த.மு.மு.க. வையும் பற்றி பேசுவதற்கு? அவர்கள் மேல் எங்களுக்கு ஆயிரம் விமர்சனம் உண்டு ஆனால் உங்களைப்போல் மனிதாபிமானம் அற்றவர்கள் அல்ல...

இன்னும் கேளுங்கள் இந்த மரண வியாபாரிகளின் வாக்குமூலத்தை...

”கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை அந்த யுத்தத்தை நிறுத்துவதின் மூலமாக புலித் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்கு திமுக முயன்ற நேரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பைத் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுயும் திமுகவுடன் கைகோர்த்தன”

அடப்பாவிகளா..!.

”இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்துகொண்டு இருந்தவேளை” என்று நீங்களே ஒப்புக்கொண்டு ஒரு சராசரி மனிதாபிமானம் கூட இல்லாமல் அந்த அநீதியான போரில் அப்பாவிமக்கள், பெண்கள், குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்களே என்ற சிறுமனிதாபிமானம் கூட இல்லாமல் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று பெருமையாக கூறிக்கொள்கிறீர்களே வெட்கமாக இல்லை.? நீங்கள் உண்மையான முஸ்லீம்கள் தானா.? (தி.மு.க போரை நிறுத்த ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை என்பது வேறு விசயம்)

உங்கள் வழிகாட்டி நபிகள் நாயகமா..? இல்லை இரத்தவெறியன் ராஜபக்சேவா..? நீங்கள் மனித நேயமார்க்கத்தை சேர்ந்தவர்கள் தானா..? உங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம்..!

தமிழகம் முழுவதும் மக்கள் அநீதியான போரை நிறுத்துங்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்களே.. சர்வதேச சமுதாயமே..! மனிதாபிமானிகளே..! இலங்கையில் போரை நிறுத்த உதவுங்கள் என்று உண்மையான மனிதம் கொண்ட எங்கள் தமிழகத்து வீர மறவர்கள், இளையவர்கள், பெண்கள், ஏன் திருநங்கைகள் கூட வீதிக்கு வந்து ஈழ அப்பாவி மக்களுக்காக போராடினார்கள். எங்கள் தமிழகத்தில் இவனைப்போல் ஒரு அறிவிற்சிறந்த மாவீரன் இனி எப்பொழுது கிடைப்பான் என்று எங்களை ஏங்கவைக்கும் எங்கள் முத்துக்குமரன் உட்பட 19 பேர் தங்கள் தேக்குமர தேகத்தில் தீவைத்து மாண்டு போனார்கள்.

ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கூட போரை உடனே நிறுத்தக்கோரி தீக்குளித்து மாவீரன் ஆனார். ஆனால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அந்த போரினால் 1,50,000 மக்கள் மாண்டு போக நீங்களும் காரணம் என்று இப்போழுது ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே என்ன வேதனை...

நாளை ஒரு நாள் உங்களுக்கு கேள்விக் கணக்கு என்று ஒன்று உண்டு என்றால்.... அந்த மக்களின் சாவுக்கு உங்களிடம் கேள்வி கேட்கப்படும்.... நடந்த அநீதியைப் பார்த்துக்கொண்டு இருந்தற்கும் கேள்வி கேட்கப்படும்.

கோவை முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது அதை தடுக்காத, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கும், பாபர் மசூதியை இடித்த பொழுது வேடிக்கை பார்த்து, அதன் விளைவாக கலவரங்களில், பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டு, பல பேர் ஆள்தூக்கி சட்டமான தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, முஸ்லீம்கள் தீவிரவாதிகளென்றும், பயங்கரவாதிகளென்றும் முத்திரை குத்தப்பட காரணமாயிருந்த காங்கிரஸ் களவாணிகளுக்கு நீங்கள் ஓட்டு கேட்டு போகவில்லையா?

இது எந்த வகைத்தந்திரம்..? தினம் தினம் எனது தமிழக மீனவன் கொல்லப்பட காரணமான சிங்களவனுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே இது எந்த வகை தந்திரம்...?

ஈழப் படுகொலைக்கு உதவிய இந்திய கொலைகார “கை”யுடன் நீங்கள் கூட்டுவைக்கும்போது விளிம்புநிலை மக்களுக்காக, தமிழக மக்களின் உரிமைகளுக்காக, சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டக்களத்தில் உள்ளவர்களுடன் கைகோர்ப்பதும், களம் காண்பதும் எங்கள் மனித உரிமைப்போராளிகள், இஸ்லாமிய அமைப்புகளின் மனித நேயக் கடமையே...

மனித நேயமே இல்லாமல் எம் ஈழமக்களின் ரத்தத்தினால் கரைபடிந்த உங்களை விட.... எங்கள் சகோதரர்கள் அவர்கள் மனிதம் எவ்வளவோ மேல்....!

இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்று பேசுபவர்களே...! எங்களின் கேள்விகளுக்கு நேர்மையான பதில் கூறமுடியுமா..?
  • ஈழத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை எதிர்ப்பது இஸ்லாமிய அடிப்படையில் குற்றமா?
  • ஈழத் தமிழ் மக்களுக்காக போராடினால் இலங்கை முஸ்லீம் மக்களுக்கு எப்படி துரோகம் ஆகும்..?
  • இலங்கையில் நடந்தது போர்க்குற்றமா இல்லையா..?
  • தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அநீதியாக கொல்லப்படவில்லையா.?
  • உலகில் அநீதி எங்கு நடந்தாலும் எதிர்ப்பது நபிவழியா இல்லையா..?
  • நீங்கள் கூறியபடியே புலிகள்தானே தவறு செய்தார்கள் அதற்காக அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்படத்தான் வேண்டுமா?
  • இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினையை ஊறுகாயாக்க வேண்டாம். தமிழக அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் என்ற கட்டுரைக்கும், இலங்கை தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் என்ன சம்பந்தம்..?
  • டப்ளீன் மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது போர்க் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதே?
  • ஜ.நா. அமைத்த நிபுணர்குழு இலங்கையில் நடந்தது போர்க் குற்றம் என்று அறிக்கை கொடுத்துள்ளதே?
  • இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, இன்னும் முள்வேலி முகாம்களில் அவதிப்பட்டு வரும் வேளையில் அவர்களுக்காக இஸ்லாமிய அமைப்புகள் போராடுவதினால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே..!

அண்டை வீட்டுக்காரனுக்காகவும் இரங்கும் நாம் பக்கத்தில் 18மைல் தொலைவில் நம் சகோதரர்கள் துடிதுடிக்க கொல்லப்பட்டார்களே மனிதநேயம்மிக்க எவரும் நடந்த போர்க்குற்றத்தைப் பார்த்து எதுவும் பேசவில்லை என்றால் நாம் மனிதர்கள்தானா..?

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரக்கம் காட்டுவதைக் கூட பொறுத்து கொள்ளமுடியாத இவர்களா மார்க்க வழிகாட்டிகள்?

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்." - திருக்குரான்: அத்தியாயம் 5 வசனம் 32

தமிழக இஸ்லாமிய மக்களே..!

பாதிக்கப்பட்ட நம் ஈழ தமிழ் சகோதரர்களுக்காக உறுதியாக குரல் கொடுப்போம்...!
தமிழக மீனவர்கள் சிங்கள வெறிநாய்களால் கொல்லப்படுவதை கடுமையாக எதிர்ப்போம்..!
அனைத்து சமூக மக்களோடும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவோம்..!
தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடுவோம்..!
மார்க்க உரிமைகளுக்காகப் போராடும் அதே வேளையில் அனைத்து மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் போராடுங்கள்!
மார்க்கத்தின் பெயரால் நம்மை சுயநலவாதிகளாக்கும் மனிதநேயமே இல்லாதவர்களை புறக்கணியுங்கள்..!
ஈழ தமிழ்மக்களுக்கு நம் உறுதியான ஆதரவை தெரிவிப்போம்.!
உலகில் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல்கொடுப்போம்..!

- உமர்கயான்.சே.

இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள், தமிழ்நாடு


மாவீரன் அப்துல் ரவூப்  கனவை நினைவாக்குவோம்

Tuesday 21 June 2011

ஏன் இன்னும் மெளனம்



ஏன் இன்னும்மெளனம்


உலகம் முழுவதும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு ஏதிராக
மனிதநேயம் கொண்ட ஒவ்வெருவரும் தங்களின் குரலை
ஒலித்துக்கொண்டுஇருக்கும் வேலையில் எம் இஸ்லாமிய
சகோதரர்களே என்ன நேர்ந்தது உங்களுக்கு.....

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஒருலட்சத்து ஜம்பதனாயிம்
மக்கள்கொல்லப்பட்டு,இன்னும் இலங்கை சிறையில் தமிழ் இளையவர்கள்,பென்கள் தினம் சித்தரவதைகள் அடைந்து செத்துக்கொண்டு இருப்பதை நீங்கள் அறிவீர்களா..?

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் எம் மக்கள்
முள்வேலி முகாம்களில் ஆடு மாடுகளைப்போல் அடைத்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா...?

ஈழத்தில் இன அழிப்புத்தான் நடந்தது என்று தினம் தினம்
ஊடகங்கள் மூலம் செய்திகள் வருகிறது
மனிதநேயம் கொண்ட ஒவ்வெறுவரும் சிங்களநாய்களின்
படுகொலைகலை கண்டித்து வரும் வேலையில் நீங்கள்மட்டும் ஏன் மவுனிக்கிறீர்கள்...?

திருநங்கைகள் கூட வீதிக்கு வந்து போரை நிறுத்தகூறி போராடினார்கள்....?
எம் தமிழினத்தின் மாவீரன் முத்துக்குமார் உட்பட 18 மனிதபிமானிகள் சிங்கள நாய்களே போரை நிறுத்துங்கள்
இந்திய அரசே சிங்களபோர்வெறியர்களுக்கு துனைபோகாதே
என்று தங்கள் தேக்கு மர தேகத்தில் தீவைத்து தங்களை தாங்களே மாய்த்து கொண்ட அந்தமாவீரர்கலை பற்றியாவது உங்களுக்குத்தெரியுமா..?

உலகம் முழுவதும் ஊடகங்கள் இலங்கையில் நடந்த இன அழிப்பு
கொடுரத்தை பற்றி எழுதியும் பேசியும் வரும் வேலையில் தமிழகத்தில் இருக்கும் சில இஸ்லாமிய இயக்கங்கள்
ஈழத்தில் என்றோநடந்த சம்பவங்கலைப்பற்றி பேசியும் எழுதியும்
நடந்த இனப்படுகொலையை நியாப்படுத்துகிறார்கள் உனர்வுடன்
 எம் இன மக்களை தமிழர்கள் என்று பார்க்கவேண்டாம் மனிதர்கள் என்றாவது பார்க்களாமே...
ஒரு மனித அழிப்பு அவலம் பக்கத்தில் 18மைல் அருகில் நடக்கிறது அதை எதிர்க்கதுப்பில்லாதவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்றும் மனிதநேயத்தை பற்றியும் பேச அருகதை அற்றவர்கள்....!

உன்மைகளை மறைத்து இஸ்லாமிய மக்களிடம் தவறான தகவல்கலை கூறி உனர்வுமிக்க இஸ்லாமிய இளையவர்களை
மூளைச்சலைவை சொய்துவரும் இம் மரண வியபாரிகளை இஸ்லமிய மக்கள் புரிந்த்து கொள்ளவேண்டும்....

என் இனிய இஸ்லாமியசகோதரர்களே....
மதுரைகுழுங்கட்டும்,சென்னை நடுங்கட்டும் என்று தேர்தல் வந்தால்மட்டும் வீதிக்கு வரும் இவர்கள் நாஜீ இட்லர்கூடசெய்யத
இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து இவர்கள் வீதிக்கு வந்ததுண்டா..?
 இவர்கள் ராஜபட்சேவுக்கு பங்காளியா? இல்லை இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்களா...?

பாலஸ்தீன்,ஈராக்,ஆப்கான்,இன்னும் அமெரிக்கஏகாதிபத்திய
ஆக்கிரமிப்பை ஏதிர்த்து போராடும் நீங்கள் அங்கு கொல்லப்படுவது மூஸ்லிம்கள் என்பதால்தான..?
ஈழத்தில் கொல்லப்பட்டது இந்துக்கள் என்பதால்தான்
நீங்கள் போராடவில்லையா?
தமிழகமீனவர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் சிங்கள இனவெறி
நாய்களால் கொல்லப்பட்டார்களே
அந்தகொல்லப்பட்டதமிழகமீனவர்களுக்காகதான் நீங்கள்
போராடியதுண்டா..?
அன்புஇஸ்லாமிய உறவுகளே...
உலகம்முழுவதும் இஸ்லாமியமக்கள்தாக்கப்பட்டபோதும்,
ஏன் இந்தியதுனைகண்டத்தில் எங்கு இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும் குரல்கொடுக்கும்நீங்கள் தமிழகமீணவர்கள்
எம்தேசகடல்வெளியில் சிங்களவெறிநாய்களின் அகோர பசிக்கு
இரையாவதை எதிர்த்து நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை
அவர்கள் இந்துக்கள்,கிருத்துவ மீணவர்கள் என்பதாலா..?
இதுவே கொல்லப்பட்டது முஸ்லீம் மீணவன் என்றால்...?

சரி ஈழத்தில் எம் இன உறவுகள் ஒட்டுமொத்தமாக
இன அழிப்பு,ஆக்கிரமிப்பு போரில் நாங்கள் பலி கொடுத்துவிட்டோம் எங்கள் வீட்டில்தான் இழவு விழுந்தது
நாங்களேஅழுதுகொல்கிறோம் நீங்கள் எங்களுக்காக அழவேண்டாம்..

இந்ததேசத்தில் அனைத்துமக்களுக்குமான வாழ்வாதார பிரச்சனைகளுக்காக எம்தேசதெருக்களில் பெட்ரோல்விலைஉயர்வு,விலைவாசிஉயர்வு, எம் மன்னையும்,எம்தேசவிவசாயிகளையும் பாதிக்கும்வெளிநாட்டு
பூச்சிக்கொல்லிகம்பெனிகள் எதிர்ப்பு, பயங்கரவாத ஆள்தூக்கி
சட்டங்கள் எதிர்ப்பு இன்னும் இன்னும் ஏராளமான மக்கள்
பிரச்சனைகளுக்காக தெருக்களில் இறங்கி போராடி,துப்பாக்கி
குண்டுகளும்,தடியடிகளும்,சிறைவாசங்களும் ஏற்றஎம் மக்களோடும்,எம் உரிமைக்காகபோராடும் போராளிகளோடும்
என்றாவது வீதிகளில் இறங்கிபோராடியதுண்டா...?
இல்லை இஸ்லாமிய இயக்கங்கள்,கட்சிகள்தான் இப்படியான
பொதுபிரச்சனைகளை முன்னிறுத்தி என்றேனும்
போராடியதுண்டா...?
யார் யாரோ போராடி, சிறை சென்று,செத்து அந்த போராட்டத்தின்
விளைவாககிடைக்கும் பலன்களைமட்டும் நீங்கள் அறுவடை செய்து கொள்வீர்கள்...?


இராக்கில்,பாலஸ்தினத்தில்,ஆப்கனில் இஸ்லாமியர்களின்மீதான
அமெரிக்கவின்,இஸ்ரேலின் ஆக்கிரமிப்புபோருக்கு ஏதிராக பீகார்,
சதீஸ்கர்,அந்திராவில் தண்டகாருன்ய காடுகளில் இருக்கும்
பழங்குடிமக்களை நக்சல்பாரி.மவோஸ்ட்புரட்சியாளர்கள்
அனிதிரட்டி அந்த அடர்ந்த வனத்திற்க்குள் பேரணிகளும்
ஆர்ப்பாட்டங்களும் நடத்தியதாவது அன்பு இஸ்லாமியஉறவுகளே,
இஸ்லாமிய இயக்கங்களே உங்களுக்குதெரியுமா..?
 அந்த பழங்குடி மக்களுக்கு அமெரிக்கவும்,ஈராக்கும் தெரியாது
ஆனல் ஒரு கொடுமைக்கு எதிராக,படுகொலைகளுக்கு எதிராக
போராடவேண்டும் என்ற பழங்குடி மக்களுக்கு இருந்த மனிதநேயம் மனிதநேய மார்க்கம் பேசும் உங்களுக்கு ஏன் இல்லை?

குஜராத்தில் இஸ்லாமியமக்கள்மீது இந்துவாவாதிகளும் நரமாமிச
நரேந்திரமோடியும்கலவரத்தைதுண்டிவிட்டபோது இஸ்லாமியர்கள்
மீதான இனவெறிதாக்குதலென்றும் குஜராத்தில் நடந்தது ஒரு
இனப்படுகொலைஎன்று நக்சல்பாரிகளும்,தமிழ்தேசிய போராளிகளும்,சனநாயகசக்திகளும்,மனித உரிமைபோராளிகள்,
எழுத்தளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வீதிகளில்
போராடினார்களே அதைத்தான் நீங்கள் அறிவீர்களா..?


இஸ்லாமிய சகோதர்களே....
நாம் எங்கோ அரபுதேசங்களில் இருந்துவந்தவர்கள் அல்லநாம்
நம்வேர்கள் இந்தமண்னில் உள்ளது.
இந்தமண்னின் அனைத்து உரிமைகளையும் நமதாக்குவோம்
அனைத்துவிதமானஒடுக்குமுறைகளுக்கும் எதிராகஅனிதிரள்வோம்
மொழி,இனம்,பாதுகாக்கபோராடுவோம்
ஈழத்தில்நடந்த இனப்படுகொலைகளுக்குஎதிராகபோராடுவோம்
மனிதநேயம்பேசிக்கொண்டு ஈழத்தில்நடந்த இனப்படுகொலையை
கண்டித்து எதுவும்பேசாத எதிர்த்துபோராடாத இனவெறியன்
ராஜபக்சேவைஎதிர்க்காத இஸ்லாமிய இயக்கங்களைபுறக்கணிப்போம்
ஈழமக்களுக்காகதன் உயிர்நீத்த அப்துல்ரவுப்பைநினைவுகூர்வோம்

இஸ்லாமியர்களே..!    இயக்கங்களே.!
நீங்கள்மனிதநேயர்கள் என்றால்
ஈழத்தில் படுகொலைசெய்யப்பட்டது அந்தபிஞ்சுகள் நம்குழந்தைஎன்றால்
சர்வதேசசட்டங்கள் அனைத்தையும் மீறி மனிதபேரழிவைஏற்படுத்திய இலங்கையை நீங்கள் எதிர்க்கவில்லை என்றால்
 உங்களிடம் மனிதநேயமும் இல்லை
மார்க்கமும் இல்லை
ஏன் நீங்கள் மனிதனே இல்லை


                   உமர்கயான்.சே