Saturday 8 December 2012

எங்கள் காஷ்மீர்

அல்லாவே எங்களின் தாய் பூமி
பூ வாசம் பொங்கிய டால் ஏரி
பூவனம் போர்க்களம் ஆனதேனோ
பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ
யாஹ் அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாதா
யாஹ் அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா
உம்மை நானும் கேட்பது மீண்டும் எங்கள் காஷ்மீர்
யாஹ் அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாத
யாஹ் அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா
அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே கல்லறை தோட்டம் ஆனதா
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே இரத்த கோலம் பூண்டதா
வாழ்கையே இங்கு தான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்களின் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று...
மரணம் கண்டு இன்று...
ஓஹ் எங்கள் காஷ்மீரின் ரோஜாப்பூ
விதவைகள் பார்த்து அழத்தானா
எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தானா
எங்களின் மண்ணில் குண்டு வைத்து எங்கும் ஓலம்
எங்களின் கண்ணில் கத்தி வைத்து குத்தும் சாலம்
ஓஹ் அல்லா எங்கு போகும் காஷ்மீர் புறாக்கள்
ஓஹ் அல்லா என்று தோன்றும் காஷ்மீர் விழாக்கள்
எங்கள் அன்றைய காஷ்மீர் எங்கள் காஷ்மீர்
எங்கள் சொர்க்க பூமியை இன்று சாக்கடையை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை பலி கேட்கும் சதி எல்லாம் யார் செய்தார்
கலவரம் முடியுமா நிலவரம் மாறுமா
எங்கள் வீட்டு தோட்டம் முன்பு போல் பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவினை வென்று வரவேண்டும்
இந்த நிலையை தந்ததாரோ புரியவில்லை
கண்களை மூடியும் தூக்கம் இல்லை
மேகம் கூட கண்ணீரை சோகமாய் சிந்துதே...
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்!!!!

Friday 23 November 2012

தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும் -தமயந்தி- (சிறுகதை, 2009. feb)


எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டடோம்.
என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம் ஆயினும் இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளி விட்டீர்.
இழிவு படுத்தி விட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர்.
எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர்.
உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கி விட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களைச் சிதறியோடச் செய்தீர்.
நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்று விட்டீர்.
அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்து விட்டீர்.
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்.
எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளாக்கினீர். வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர் ஏனைய மக்கள் எங்களைப் பார்த்து தலையசைத்து நகைக்கின்றனர் (திருப்பாடல்கள்; 44: 8-14) 
 
சித்திரையைச் சுட்டெரிக்கும் கத்திரி வெய்யிலில்கெட்டில் பெரியமுனங்கின் கரும்பாறைகள் கொல்லன்பட்டறை அடுப்பாய் கொதித்துக் கிடக்கும் சொந்தமாயொரு வள்ளம் வைத்திருக்க வக்கற்றதோர் கடலவன் அலைவாய்க் கரையில் இறங்கிப் பட்டியிழுத்து முனங்கில் கடிப்புத் தட்டி துடிப்பானதை பறியெடுத்துப்போக, சீண்டவோர் காகம்கூட இல்லாத சாபக்கேடாய் சாதாளைகளும் காரற்குஞ்சுகளும் முனங்குப் பாறையில் பொரிந்து கிடக்கும்.

எனது மண்டையோட்டினுள் கிடக்கும் தேய்ந்துபோன மூளையுமதுபோல் காரல்கருவாடாய் காய்ந்து கனக்கும். மூக்குத்துவாரங்களுள் மூளைப்புழுதி மணக்கும். ஆயினும் என்னுடல்மீது எண்ணையை ஊற்றி கொளுத்துமளவிற்கு எந்தச் சலவையும் இன்னமும் எனது மண்டையை ஆளுமை கொள்ளவில்லை என்பது மட்டும் நிசம். இருபகுதியும் போர் பொருத அவர்களும் இவர் களும் சொற்பம் சொற்பமாய் சாகிறார்கள். இரு பகுதிகளுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட எனதூர்ச் சனங்களோ அவர்களையுமிவர்களையும் விட அதிகமாகவே சாகிறார்கள். என்ன நடக்கிறது, ஏன் சாகிறோம் என்பதெதுவும் தெரியாமலே சிதறிச் சாகிறார்கள்.

இந்த உத்தரிப்பு ஸ்தலத்துக்குள் எப்படி மேய்த்து வரப்பட்டார்கள் என்ற சூட்சுமத்தைக்கூட இந்த நொடிவரை அறிந்திலார். யாழ்ப்பாண வெளியேற்றத்தின் போதிலிருந்தே இது இவர்களுக்குப் புரியாத புதிர் மட்டுமல்ல இவர்களது வாழ்வுக்கும் தொழிலுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்தமில்லாத நிலமும்தான். சிங்கமும் புலியும் இவர்களுக்கான வாழ்வை வைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் உப்புச்சோளகத்தில் கறுப்பும் சிவப்புமாய் கொப்பு மொய்த்துக்கிடக்கும் ஈச்சம் பழங்களைப்போல் மடிநிறைய மரணங்களை வைத்திருந்து நேரகாலபேதமின்றி அள்ளியள்ளியே வழங்குகிறார்கள்.

'ஐயோ என் சனமே! இந்த ஈனக்கொலைச் சாதியால் கொத்தும் குலையுமாய் கொல்லப்படவோ கொண்டு செல்லப்பட்டீர்?' என ஒவ்வொரு கணமும் மனம் ஒப்பாரியிட்டுக் கொண்டிருக்கும். வன்னிக்காட்டில் மிருகங்களின் மத்தியில் சாவைச் சுமந்தலையும் என் சனங்களோடு கொஞ்சம் என்னைப் பேச விடுங்கள். நாளை அவர்கள் இருக்கமாட்டார்கள் என்றென் புத்தி சொல்கிறது. அதற்குள் அவர்களது நினைவுகளோடு சற்று நான் பேசியாக வேண்டும்.!

அல்வீன்.
நல்ல வடிவான கருப்பி.
என்ர அம்மாவின்ர ஒண்டுவிட்ட அண்ணன் யோசையின்ர மூணாவது மகள். எனக்கு மச்சாள். என்னைவிட ரெண்டு வயசு மூத்தவள். ஆனால் என்னோடதான் அஞ்சாம் வகுப்பு மட்டும் படிச்சுப் போட்டு பாதியிலயே நிண்டிட்டாள். என்னைவிட கெட்டிக் காரியெண்டுஞ் சொல்லலாம். எண்டாலும் அவள் பாதியிலயே பள்ளியால நிண்டிட்டாள். ஏனென்டு கேட்டால் பேரன் பேத்தி வயசானதுகளாம், தனிய ஒரு கொட்டிலில இருக்குதுகளாம், அதுகளுக்குத் தோதா உதவிக்கிருக்கச் சொல்லி யோசைமாமா அவளப் பள்ளிக்கூடத்தால மறிச்சுப் போட்டார்.
என்னில சரியான நேசமானவள். பவுண் மச்சான், பவுண் மச்சான் எண்டு அவள் என்னக் கூப்பிடேக்கயெல்லாம் எனக்கெண்டால் சரியான வெக்கமாயுங் கூச்சமாயிமிருக்கும். அதோட பயமாயுங் கிடக்கும். ஏனெண்டால் ஈஸ்வரராசன், எட்மன்ட் எண்டு ரெண்டு வளந்த மாடுகளும் எங்களோட படிச்சவங்கள். ரெண்டும் சரியான அம்மண முத்தையாக்கள். 'மச்சான், மச்சான்' எண்டு இவள் என்னக் கூப்பிடுகிறதக் கவனிச்சாங்களெண்டால் அவ்வளவுதான். என்னையும் அல்வீனையும் ஒண்டாக்கிப் பட்டந் தெரிப்பாங்கள். இதில ஈஸ்வரராசன் கொஞ்சம் பரவாயில்ல. தூசணம் சொல்லுவானே தவிர குரங்கு வேலயள் காட்டமாட்டான். எட்மன்ட் பொல்லாதவன். அடிப்பான். கண்டதுக்கெல்லாம் சும்மா நொட்டுவான். சுவருகளிலயெல்லாம் கரியால, செங்கட்டியால தூசணம் எழுதி வைப்பான். மாஸ்ரர்மார் உடனயே கண்டுபுடிச்சுப் போடுவினம். செவுள் அடியும் வாங்குவான். பள்ளிக்கூடம் முழுக்க இவங்கள் ரெண்டு பேற்ற ஆட்சிதான்.

எங்கட பள்ளிக்கூடத்துக்கு வாற மாஸ்ரர் டீச்சர்மார் எங்கட கிணத்துத் தண்ணி குடிக்க மாட்டினம். இவயளுக்கு தண்ணி யெடுத்துக்கொண்டு வாறதுக்கெண்டே மூண்டு சாராயப் போத்தல் பள்ளிக்கூடத்தில இருக்கு. ஒண்டரக் கட்டைக்கு நடந்துபோய் பறையன்கேணி ஒழுங்கைக்குள்ள இருக்கிற ஆசைமுத்து எண்ட வெள்ளாளவீட்டுப் பைப்பிலதான் தண்ணி எடுத்துக்கொண்டு வரவேணும். இவங்கள் ரெண்டு பேருந்தான் அதுக்கும் போவாங்கள். மாரிகாலத்தில தண்ணிக்குப் போயிற்று வாற வழியில எல்லாப் போத்திலுகளிலயும் ரெண்டு ரெண்டு மிடறு தண்ணி குடிச்சுப் போட்டு, வழியில தொட்டந் தொட்டமாக் கிடக்கிற மழத் தண்ணியில கையால தெளிச்சு அள்ளி போத்தலுகளுக்க விட்டுக்கொண்டு வருவாங்கள். சிலவேளயில எச்சில் துப்பிக்கொண்டு வருவாங்கள். இவங்கள் தண்ணியெடுத்துக் கொண்டு வாறதுக்குள்ள சமயபாடம் முடிஞ்சு, தமிழும் பாதி முடிஞ்சு போயிரும். எட்மன்ட் எல்லாப் பாடத்துக்கும் அடி வாங்குவான். விழுகிற அடி நோகாமலிருக்கிறதுக்காக ஒவ்வொருநாளும் காற் சட்டைக்குமேல இன்னொரு காற்சட்டை போட்டுக் கொண்டு வருவான். இன்ரேவல்ல கிளித்தட்டு விளையாடேக்க இவங்கள ஒருத்தரும் அவுட்டாக்கக் கூடாது. அப்பிடி ஆராவது அவுட்டாக்கினால் அடிப்பாங்கள். சரியான அட்டூழியம் புடிச்சவங்கள்.

எனக்கு வெல்லக்கட்டியெண்டால் சரியான விருப்பம். அப்பயெல்லாம் எங்கட இடங்களில இந்த அச்சுவெல்லம் லேசில கிடைக்காது. இது இந்தியாவிலயிருந்து வல்வெட்டித் துறையாற்ற கள்ளக்கடத்தல் போட்டுகளிலதான் வரும். இடைக்கிடை யோசை மாமா வல்வெட்டித் துறை ஆரோய்க்கியசாமியின்ர போட்டில ஓட்டியாப் போய் வருவேர். யோசைமாமா வீட்டில எந்த நேரமும் அச்சு வெல்லம் இருக்கும். எனக்கு வெல்லக் கட்டியெண்டால் விருப்பமெண்டு தெரிஞ்சு பள்ளிக்கூடத்துக்கு வரேக்க அல்வீன் மச்சாள் நெடுகக் கொண்டு வருவாள். வெல்லம் மட்டுமில்ல ஒவொரு நாளும் ஏதெண்டாலும் கள்ளத்தீன் கொண்டுதான் வருவாள். ஊர்நெல்லிக்காய், கறுவாப் பட்டை, மாங்காய், இலந்தப்பழம், பால்ரொட்டி... இப்பிடி. இன்ரேவல் நேரத்தில ஈஸ்வரராசனுக்கும் எட்மன்ட்டுக்கும் தெரியாமல் ரெண்டுபேரும் பங்கு போட்டுத் தின்னுவம். அல்வீன். நல்ல வடிவான கருப்பி.

ஒருநாள் ராஜகுமாரி கூத்து ஒத்திகய எங்கட அண்ணாவியார் வாசகசாலைக்குள்ள நடத்திக் கொண்டிருந்தேர். அதில பொம்பிளத் தளபதி வேசம் எனக்கு. ஊரை விட்டு நான் வெளிக்கிடுகிற வரைக்கும் எனக்குப் பொம்பிள வேசம் தான் கிடைக்கிறது. ஒத்திக முடிய இருட்டாகீற்று. இண்டைக்குவர கரண்ட் இல்லாத ஊர்தான் எங்கட ஊர். காப்போரெத்தினம் எலக்சனுக்காக ரெண்டு கரண்டுக் கட்டயக் கொண்டு வந்து ஊர் வாசலில நட்டதோட சரி. அவருக்கு வோட் பண்ணயில்லயெண்டதுக்காக இண்டைக்கு வரைக்கும் கரண்ட் கணைக்சனே இல்ல. தமிழரசுக் கட்சிக்கோ இல்லாட்டிக்கு கூட்டணிக்கோ இந்த ஊரச்சனம் வோட்டுப் போட்டு நானறியன். ஏனெண்டு சொன்னால் இவங்கள் வந்து 'கிழக்கு மேற்கு, சூரியன் உதயம், ரெத்தத்திலகம் தனிராச்சியம்...' இப்பிடிச் சொல்லுற ஒரு தாலியறயும் சனத்துக்கு விளங்கிறதுமில்ல, தேவயுமில்ல. கடலையும் கரையயும் விட்டா அதுகளுக்கு வேறையரு புருவத்தோரியும் தெரியாது. இதெல்லாந் தேவயுமில்ல, என்ன சவத்துக்கு.. எண்ட எண்ணம் சனத்துக்கு.

தங்களுக்கு வோட் போடுறதில்லயெண்டு இந்தக் கிராமத்த கூட்டணிக்காரர் எவ்வளவு பழி வாங்கினாங்களெண்டது ஊர்ச்சனம் எல்லாத்துக்கும் தெரியும். குடி தண்ணிக்கே சனத்தத் தவிக்க விட்டவங்கள். உப்புத் தண்ணியக் குடிச்சுத்தான் முழுக் கிராமமுமே உயிர் வாழ்ந்ததுகள் எண்டால் நம்ப மாட்டீங்க.

வாசகசாலயிலயிருந்து எங்கட வீடு கொஞ்சம் தூரம். அல்வீன் வீடு பக்கத்தில. அவள் எந்த ஏமஞ் சாமமெண்டாலும் பயப்பிடமாட்டாள். தனியத் திரிவாள். பேய்க்குப் பயப்பிடயே மாட்டாள். அல்வீன் வீட்ட போனால் அவளயும் துணைக்குக் கூட்டிக்கொண்டு எங்கட வீட்ட போகல்லாம் எண்ட ஐடியாவில அங்க போக வெளிக்கிட்டன். கச இருட்டு. வாசகசாலயிலயிருந்து அல்வீன் வீட்ட சரியா லெக்குப்பாத்து மண்டேக்குள்ள பதிச்சுப்போட்டு, கண்ண இறுக்கி மூடிக்கொண்டு ஓடினன். லெக்கு கொஞ்சம் கணக்குப் பிசகி டேவிற் பெரியையா வீட்டு முள்ளுக்கம்பி வேலிக்குள்ள நேர போய்ச் சொருகீற்றன். முள்முடி அறைஞ்ச யேசுநாதர் மாதிரி முகமெல்லாம் ஒரே ரெத்தக்காடு. கைவிளக்கு வெளிச்சத்தில என்ர கோலத்தப் பாத்திற்று அல்வீன் கத்த வெளிக்கிட்டாள். சரியாத்தான் பதகளிச்சுப் போயிட்டாள். அயலட்டமெல்லாங் கூடிப் போச்சு. அப்பதான் தெரிஞ்சுகொண்டன் அல்வீன் மச்சாள் என்னில சரியான பாசமெண்டு. அவள் அண்டைக்குக் கத்தின கத்தும் துடிச்ச துடிப்பும் இப்பவும் என்ர மண்டேக்குள்ள வலிச்சுக் கொண்டுதான் கிடக்கு.

ஆண்டு:1980 , மாதம்: மார்கழி
திகதி: 3 ,
கிழமை: புதன்,
நேரம்: 7.15 காலை.
காலநிலை: மெல்லிய மப்புமந்தாரம்.
மழையின் அறிகுறியாய் வாயூறியபடி.

களங்கண்டி வலையிழுக்கப் போன ஐயா கடலாலை வந்திருவேர். வாறதுக்குள்ள புட்டவிச்சு கறியையுங் கூட்டி முடிச்சிட்டால் ஐயா கடலால வந்தோண்ண அடுப்பில வச்சிரலாம். ஐயா களங்கண்டியிழுத்து துடிக்கத்துடிக்கக் கொண்டுவாற குஞ்சுக் கணவாயில எடுத்து மைக்கூடும் போட்டு அம்மா அல்லது ஆச்சி புளியவியல் வச்சினமெண்டால் ஒரு தூக்குத் தூக்கி சிரசில அடிக்கும்.

"பவளம் மாமாவின்ர கடைக்கு ஓடிப்போய் தேங்காய், வெங்காயம், செத்தல்மிளகாய், புளி வாங்கிக்கொண்டு கெதியா ஓடிவா ராசா" எண்டு அஞ்சுரூவாயத் தந்து அம்மா அனுப்பி வச்சா. சட்டெண்டு மூளையில ஒரு பொறி தட்டிச்சுது. சரியா ரெண்டுவருசக் கனவு. இவ்வளவுகாலமும் வீட்டுக்குத் தெரியாமல் இயக்கத்தின்ர கல்வி வட்டத்துக்குப் போய் வந்து கொண்டிருந்த நான், வீட்டவிட்டு வெளிக்கிட்டுப் போறதுக்கு நல்லவளம் பாத்துக் கொண்டிருந்தன். 'இது தான் தரணம் வெளிக் கிடடா சிங்கா' எண்டு அம்மா தந்த அஞ்சு ரூவா என்ர கையிலயிருந்து கரண்ட் அடிக்கிற மாதிரி நல்லொரு மணம் மணந்து சுரண்டிச் சுரண்டிச் சிக்னல் குடுத்துது. அதோட மழ வாற துக்கு அறிகுறியா புழுதியும் நாசிக்குள்ள அடிச்சுது. தேகமும் ஒருமாதிரியாக் குளுந்துகொண்டு வந்துது. அதொரு பயமில்லாப் பதட்டமாயும், நல்லாயுமிருந்துது. மசிரவிட்டான் சிங்கன். தங்கச்சியின்ர மொனிட்டர் கொப்பியில ஒரு ஒற்றயக் கிழிச்சு 'நான் நாட்டுக்கு சேவை செய்யப் போகி றேன் தேடவேண்டாம்' எண்டமாதிரித்தான் ஏதோ சரியா ஞாபகமில்ல, எழுதி கொடியில கிடந்த ஐயாவின்ர சேட்டுப் பையுக்குள்ள வச்சுப் போட்டு உடுத்தியிருந்த சாரத்தோடயே 180ம் நம்பர் 8மணி பஸ் எடுத்து யாழ்ப்பாணம் போனனான்தான், (அப்ப எனக்கு 18வயசும், 7மாசமும், 24 நாளும், 9மணித் தியாலமும் முடிஞ்சிருந்துது. எண்ட மட்டில நான் குழந்தப் போராளியில சேர்த்தியில்ல)

இயக்கத்துக்கு நான் ஓடிப்போய் 56நாளுக்குப் பிறகிட்டு 28.01.1981 புதன்கிழம காலம்பிற பத்தேமுக்கால்போல ரெண்டு தோழர்மாரயுங் கூட்டிக்கொண்டு எங்கட கிராமத்துக்குள்ள வந்துகொண்டிருக்கிறன். லவுட்ஸ்பீக்கர் பாடிக் கேட்டுது. நாங்கள் வாறது தெரிஞ்சு கொஞ்சச் சனம் எங்களத் தேடி ஓடி வந்திச்சினம். தவமண்ணன், ரெத்தினமண்ணன், துரையண்ணன், பூவானத்தான், சில்வேஸ்ரர் சின்னையா, கிறிஸ்தோப்பு மாமா, முத்துக்கிளி மச்சாள், ராசமணியக்கா, தங்கச்சி யூடித்... இப்பிடிக் கனக்கச் சனம். எல்லாம் சொந்தக் காரச்சனம்தான். என்ர கிராமத்தில இருக்கிற எல்லாச் சனமுமே எப்பிடித்தான் சுத்திச் சுத்திப் பாத்தாலும் எனக்கு ரெத்த உருத்துகள்தான். குய்யோமுறையோ எண்டு கத்திக்கொண்டு ஓடிவந்த சனங்கள் என்னையும் ரெண்டு தோழர்மாரயுந் தூக்கித் தலைக்கு மேல வச்சு சுற்றுப்பிரகாரமாக யோசை மாமாவின்ர வீட்டுப் பக்கம் கொண்டு போச்சினம். ஊர்ச்சனம் முழுக்க யோசை மாமா வீட்டைதான். யோசைமாமா வீடு பந்தல் போட்டு வடிவாச் சோடிச்சிருந்துது. அல்வீனுக்கு கலியாணம். இருபது வயசிலயே அவளுக்குக் கலியாணம் முடிஞ்சுப்போச்சு. எங்கட ஊரப் பொறுத்த மட்டில பொம்பிளைக்கு இருபது வயசு பக்குவத்தோதான வயசுதான். முந்தியெல்லாம் அப்பிடியில்ல. பன்ரெண்டு பதின்மூணு வயசிலயே கலியாணங் கட்டி வச்சிருவினம். ஆம்பிளப் பிள்ளயளண்டால் பதினாறு பதினேழு வயசே போதுமெண்டிருந்துது. ஏனெண்டால் அந்த வயசிலயே அவர் ஒரு முழுத் தொழிலாளியாப் போயிருவேர். இப்ப சரியான மாற்றம். சின்ன வயசிலயே கடல்தொழிலுக்கு அனுப்பாமல் தங்கட பிள்ளயளயும் படிப்பிக்க வேணுமெண்ட கொள்க சனத்துக்கு வந்திட்டுது. இப்ப இருபது இருபத்தஞ்சு வயசு வந்தேப்பிறகிட்டுத்தான் கலியாணம்.
பந்தலுக்குள்ள நான் போகமுதலே கலியாணப் பொம்பிள, அவளொரு தேவதை மாதிரியே அச்சொட்டாய் ஓடிவந்தாள். ஆக்களுக்கு முன்னாலயே கட்டிப்புடிச்சுக் கொஞ்சினாள். 'என்ர ஆசமச்சான், என்ர பவுண் மச்சான், நீ கட்டாயம் என்ர கலியாணத்துக்கு வருவாயெண்டு எனக்குத் தெரியுமடா' எண்டு அவள் சொல்லிக்கொண்டே கண்ணெல்லாங் கலங்கிப்போனாள். எனக்கும் சரியான சங்கடமாயிருந்துது. கால்ப் பாதங்கள் ரெண்டும் வேர்த்துக் கசிஞ்சு பாட்டாச் செருப்பு வழுக்கிறமாதிரி வந்திற்றுது.

கலியாணச்சாப்பாடு. நினைச்சால் இப்பவும் வாயூறுது. நல்ல கொழுத்த மாட்டிறைச்சிக்கறி. அல்வீன் மச்சாள் என்னயுந் தோழர்களயும் பக்கத்தில இருந்து விழுந்து விழுந்து கவனிச்சாள். இதை எழுதிறபோதுதான் கிட்டடியில நடந்த ஒரு விசயம் நினைவுக்கு வருகுது. தோழர் ஒருத்தரோட ஒருநாள் கதைச்சுக்கெண்டிருக்கேக்க சொன்னன் 'எங்கட கிராமத்தில கலியாண வீடுகளில கட்டாயம் மாடு வெட்டுவம் தோழர்' எண்டு. அவரால நம்பவே ஏலாமல்ப் போச்சு. அவருக்கெண்டால் பெரிய ஆச்சரியமாத்தான் இருந்துது. இப்பவுந்தான் வெளிநாடு வந்ததுக்குப் பிறகும் எங்கட ஊர்ச்சனங்களின்ர கலியாணங் கொண்டாட்டங்களில கட்டாயம் மாட்டுக்கறி சமைப்பம். இங்க வெளிநாடு வந்ததிலயிருந்து வேற ஊராக்களின்ர கனக்கக் கலியாணங்களுக்குப் போயிருக்கிறன். வெறும் மரக்கறிதான். இங்க இருக்கிற தமிழரும் சொல்லுகினம் 'சீ... கொண்டாட்டங்களுக்கு மாட்டுக்கறியா...' எண்டு. எனக்கு ஒரே சிரிப்பாத்தான் வரும். இங்க வெள்ளயளின்ர கலியாண வீடுகளுக்குப் போற எங்கடயாக்கள், அவன் அரையவியலாக் குடுக்கிற மாட்டுச் சீவல அள்ளிவச்சு கழுத்துமுட்டக் கட்டுவினம். ஆனால் வெளியால வந்து ஒண்டுந் தெரியாத ஆக்கள் மாதிரி 'சீ... மாட்டுக்கறியா...?' எண்டு தாளம் போடுவினம். அதென்னவோ எனக்குத் தெரியாது மாட்டுக்கறி இல்லையெண்டால் அது கலியாணம் மாதிரியே எனக்குப் படுகிறதில்ல.

இன்று 27.02.2009.
'அவர்களின் வாய் பேசுவதும், நா உரைப்பதும் பாவமே.
அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்க வைப்பதாக.
அவர்கள் சபிக்கின்றனர்.
அடுக்கடுக்காய் பொய் பேசுகின் றனர்.' (திருப்பாடல்கள்; 59:12)
உக்கிரமடைகின்றது வன்னிப்போர். முன்னேற முடியாமல் சிங்களப்படைகள் முடக்கம். 3நாட்களில் தொள்ளாயிரம் படையினர் பலி. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயம். (தமிழ்வின்- வெள்ளிக்கிழமை, 27பெப்ரவரி 2009, 03:47.55பி.எம்) போன்ற செய்திகளையும், இன்னும் இதேபோல் இன்று இங்கெல்லாம் மனித மூளைகளை மண்டையோட்டினுள்ளிருந்து நாயிழுவை பேயிழுவையாக இழுத்து வெளியில் போட்டு மேய்ந்து கொண்டிருக்கும் இணையத் தளங்கள் சிலவற்றோடும் மாரடித்தோய்ந்து, பிடரிவலி தொடங்கு வதையுணர்ந்து எழுந்திருக்க எண்ணிய போதுதான்; அந்தக் காட்சி பார்வையில் கிடைத்தது. கைதேர்ந்த ஒளிப்பதிவாளரின் கேமராமொழி கச்சிதமாயும், மிக நிதானமாயுமிருந்தது.

உக்கிரப் போர் நிலம் என்கிறார்களே...?
மக்கள் அவலத்தோடு கொந்தளிக்கிறார்கள் என்கிறார்களே...?
பதுங்கு குழிகளை விட்டு வெளியே வந்தால் மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்படுகிறார்கள் என்கி றார்களே...?,
படம் பிடிப்போர் மட்டும் எப்படி நிதானமாய் தங்கள் பணியில் முனைப்போடு இயங்குகிறார்கள்? ஒரு கேமராக்காரனாய், ஒரு போர்ப் படப்பிடிப்பாளனாய் இருந்துகூட யோசித்துப் பார்க்கிறேன். முடியவில்லை. குஞ்சுகுருமான்கள், கிழடுகட்டைகள் முதற்கொண்டு எலும்பும் தோலுமான மக்கள், கும்பல் கும்பலாய் பிணங்களை விலத்தி குடி தண்ணீருக்கும், ஒரு குவளை கஞ்சிக்கும் ஆலாய்ப் பறக்கிறார்கள், ஆனால் இந்த களப்படப் பிடிப்பாளர்கள் எந்த பலத்தின் பின்னணியில் நின்று சூட்டிங் நடத்துகிறார்கள் என்ற கேள்வி எழுமிடத்து: கொழுப்பெடுத்து, கொலைத் தினவெடுத்துத் திரிந்துவிட்டு, பஞ்சப்பட்ட சனங்களை பலியாடுகளாய் கந்தகத்தீயில் தள்ளிவிட்டு ஓடி ஒளிந்துகொண்ட தலைவனையும், தளபதிகளையும் எண்ணி, கொல்லும் கோபம்தான் எழுகிறது.

ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்.
சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்.
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்.
எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்.
தம் வலையில் சிக்க வைத்து இழுத்துச் செல்கின்றனர்.
அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்.
அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப் படுகின்றனர்.
(திருப்பாடல்கள் 10: 8-10)

Title: The Life and distress of the displaced people in Mullaitivu district.Date filmed: 24.02.2009, Date uploaded: 25.02.2009
கேமரா ஊர்ந்து செல்கிறது. ஒரு தற்காலிக கொட்டகை போடப்பட்ட இடத்தில் கஞ்சி கொடுக்கிறார்கள். சிறுவர்கள், முதியவர்கள், பெண்களென்று பலநாள் பட்டினியில் வாடிப்போன உடலங்களாய் மக்கள் கூட்டம் ஒரு குவளை கஞ்சிக்காக கையில் கிடைத்த தட்டுகள், கோப்பைகள், செம்பு, குவளை என்று ஆளுக்கொன்றை ஏந்திப் பெறுகிறார்கள். அந்த மக்களின் முகங் களைத் தேடி இடையிடையே காமெரா குளோஸ்-அப்பில் செல்லும்போது முகங்களால் வழிந்தோடும் அவமானங்களையும் துடைத்துக்கொண்டு, எஞ்சியிருக்கும் குழந்தை குட்டிகளின் உயிர்களைக் காத்தால் போதும் என்பதாய் ஒரு குவளை கஞ்சியைக் கையேந்திச் செல்கிறார்கள். கட்.

'பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக் கொள்ளும்! பச்சிளம் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!' (புலம்பல் 4:4)

68-70 வயது மதிக்கத்தக்க, ஒட்டியுலர்ந்த, ஒரு துணிக்கையளவேயான உயிரைச் சுமந்த ஒரு பெண்ணிடம் கேமரா செல்கிறது.
நிலத்தில் குந்தியிருந்தபடியே ஒப்பாரியிட்டு அழு கிறாள்.
அந்த முதியவளின் ஒப்பாரிகளுக்கிடையில் கொட்டுண்டு சிதறும் வார்த்தைகளையும், அவளையும் ஆடாமல் அசையாமல் கேமரா நிதானமாய் பதிப்பித்துத் தருகிறது.

'மருமகனுக்குப் பேர் செல்லத்துரை. அவருக்கு ஒரே வருத்தமும் காச்சலும்... சுருண்டு கிடந்தவர். என்ர பேத்தி, பன்ரெண்டு வயசு... அதுகளுக்குத் தண்ணி எடுப்பமெண்டு வந்தன்... தண்ணிக்குப்போனா தண்ணி தர மாட்டனெண்டுட்டுதுகள்.. அதோட இங்க நல்ல தண்ணிக் கிணறிருக்காம் எண்டு சொல்லிச்சுதுகள்..... ஓட்டவாளியால உரஞ்சி உரஞ்சிக் கொஞ்சத் தண்ணி..... ஒரு வாளிக்க நிறயக் கொண்ணந்தன்.. ஒரு கடயில கொண்ணந்து வச்சிற்று... என்னால தாங்கேலாமல்ப் போச்சு நெஞ்சுக்குத்து... இந்தத் தேச மெல்லாம் போனன்.... தெரியாது எண்டிட்டினம்.... பேந்து அங்கால இருக்காமெண்டு போக.... அதுக்க கடல்..... ஐயோ...கடல் கடல் கடல்......''
அம்மா அவயளக் காணயில்லயா....?' (மிகத் தெளிவான ஒலிப்பதிவில் இது ஒரு உசாரான இளம் பெண் குரல்)
'இல்லே... என்ர புள்ளயளக் காணே...ன். இந்தத் தேசமெல்லாந் திரியிறேன்... ஒரு கொட்டில் மாதிரி தறப்பாள் போட்டு... செல்லடிக்கு பயத்தில பங்கர் வெட்ட ஏலா தெண்டு... மருமகனுங் குந்திக்கொண்டிருக்கிறேர்... தண்ணி விடாயில வந்தனான்... சமைக்கவுமில்ல, ராத்திரியும் சாப்பாடில்ல, ஒண்டுமேயில்ல அரிசி சாமான் ஒண்டுமேயில்ல ஐயோ.... என்ர பிள்ளயளுக்கு தண்ணி குடுப்பார் ஆருமில்லயே... அந்தக் குஞ்சு... சின்னப் பேரப் பிள்ளக் குஞ்சும் அதுக்க.... ஐயோ.... எல்லாரட்டயுங் கேட்டுட்டே..ன்....''
"உங்கட சொந்தக்காரர் ஒருத்தரயுங் காணயில்லயா....?' (அந்த இளம் பெண்).
"ஐயோ... இல்ல..., இரணடுமடுவில இருந்தே என்ர சொந்தக்காரரக் காணயில்ல....
எல்லாரும் எங்க எவ்விடமெண்டில்ல...."
வன்னிச்சண்டை தொடங்கியதிலிருந்து தினமும் ஒப்பாரி களாலும், மனித ஓலங்களாலுமே மலிந்து நிரம்பி வழிகின்றன தமிழ்த் தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும். ஆனால் இன்று இந்த முதிய பெண்ணின் அவலக்குரல் எனது அடிவயிற்றை ஏதோ செய்து கொண்டிருந்தது. பிடரி நரம்பில் சுள்ளென வலித்தது. அறிமுகமான சுடுமணலின் வாசம் ஒன்று நாசித் துவாரங்களுக்குள் ஊர்ந்து சென்றது.
கேமரா தொடர்ந்து நகர்கிறது. அதே நிதானத்துடன். மேலும் பல மனிதர்களின் அல்லோலகல்லோலமான காட்சிகள்.

'எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
ஆயினும் நீர் எங்களை கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் நொறுங்கும்படி விட்டுவிட்டீர்.
சாவின் இருள் எங்களைக் கவ்விக் கொண்டது' (திருப்பாடல்கள்; 44:19)
மீண்டும் மீண்டும் அந்த முதுமையின் அவலமான ஒப்பாரியும் ஓலமும் நெஞ்சைப் பிசைந்தது. இரத்த நாளங்களை விட்டு இதயத்தைத் தனியாக அறுத்தெடுத்து தரையில் போட்டது. மீண்டும் எனது மண்டைக்குள் அதே வலி.
'அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்.
நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்.
என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்.' (புலம்பல் 1: 14-15)

இணையத்தளங்களை நிறுத்திவிட்டு, அறுந்து தொங்கும் நெஞ்சக்கூட்டை புகையால் நிரப்ப ஒரு சிகரட்டை எடுத்து மூட்டிக் கொண்டேன். புகை வளையங்களும் ஒப்பாரியிட்டபடியே காற்றில் கரைந்தன.

'நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்.
எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது' (திருப்பாடல்கள் 44:25)

தொலைபேசி மணி. தங்கை யூடித். அழுகை விசும்பலுக்கி டையே 'அண்ணே... அல்வீன் மச்சாளப் பாத்தனியாண்ணே....?' எனக்கேட்டாள்.
'எங்கேயடி....?' என்றேன். நான் பார்த்த அதே வீடியோக் க்ளிப்பைச் சொன்னாள். 'அதில எங்கயடி....?' கேட்டேன். 'அதில கிழவியண்டு குளறிக் கொண்டிருக்குதண்ணே..., அதுதானண்ணே...."
''விசர்க் கதை கதைக்காத. உனக்கார் சொன்னது..?''
"மன்னாரிலயிருந்து ராசுக்குஞ்சியப்பு இப்ப கொஞ்சத்துக்கு முதல்த்தான் எடுத்தவர். அவர்தானண்ணே சொன்னவர். இப்பிடித்தான் சனமெல்லாம் எலும்புந் தோலுமா இருக் காம்... எங்கட கனக்கச் சனம் எங்கெங்க இருக்குதெண்டே தெரியாதாமண்ணே. அந்தக் கவுண்டு போவானுக்கு ஒரு கொள்ளநோயும் வராதா பாலதீவு அந்தோனியாரே? அவன்ர தலயில இடி விழாதா மடுவுமாதாவே...?!" ஒரு கிழவிபோல் திட்டினாள். ஒரு குழந்தைபோல் தேம்பி அழுதாள்.

வாயில் எரிந்து கொண்டிருந்த சிகரட் ஆட்லறியாய் வெடித்துச் சிதறியது. சிதறித் தெறித்து சுவரெல்லாம் ஒட்டிக்கொண்ட என் இறைச்சித் துண்டங்களை ஒரு ஒப்பாரி வந்து கூட்டி அள்ளிக் கொண்டிருந்ததை எனது வீட்டுக்கூரையின் மீதிருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அது அல்வீன் மச்சாளின் ஒப்பாரி. எனது அழகிய கருப்பியின் ஒப்பாரி.

28.02.2009, நேரம்: 00:07
தொள்ளாயிரம் சரிகளும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களின் சமன்பாடுகளும், என் வாயிலிருந்து வெடித்த ஒரு ஆட்லறியில் சுக்கல் சுக்கலாய் சிதறிப் போயின.
'வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!' (திருப்பாடல்கள் 46: 8-9)
 நன்றி. பிறத்தியாள். இனையம்.

Tuesday 18 September 2012

தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா..? மக்களாட்சியா…? ஜனநாயக வழியில் சென்னையில் போராடிய இசுலாமியர்கள் மீது தாக்குதல்



அன்பான உறவுகளே…
கடந்த இருவாரங்களாக தமிழக சூழல் மட்டுமல்ல உலக அளவில் நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது உலக இசுலாமிய மக்களின் உணர்வு போராட்டம்….
இசுலாமியர்கள் தங்கள் உயிரை விட மேலாக கருதும் முகமது நபியை அமெரிக்காவின் கைகூலி இசுரேலின் செல்லகுழந்தை ஒன்று கேவலமாக சித்தரித்து திரைப்படம் எடுத்து உலக இசுலாமியர்களின் வெந்த புண்னில் வேல்பாய்சியது.
உலக வல்லாதிக்க அமெரிக்காவோ அவனின் ஆடாவடி செயலுக்கு வக்காலத்து வாங்கி தனது இசுலாமிய எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்துள்ளது. உலக அளவில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், என்னை வள நாடுகளை தனதுகைக்குள் வைத்துக்கொள்ள தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இசுலாமிய நாடுகளை குறிவைத்து உலக பொது எதிரிகளாக இசுலாமிய மக்களை அடையாலம் காட்டும் வகையில் தனது நச்சுகருத்துக்களை பரப்பியது ”இசுலாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் இசுலாமியர்களே” என்ற நச்சு விதையை பரப்பி உலக மக்களிடமிருந்து இசுலாமியர்களை தனிமை படுத்தும் போக்கை கையாண்டு வரும் வேலையில் இப்படியான திரைபடத்தை அமெரிக்க மன்னில் இருந்து ஒரு ஊடக பயங்கரவாதத்தை பரப்பும் பயங்கரவாதியாக செயல்பட்டு இன்று உலக அளவில் ஒரு அமைதின்மையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இந்நச்சு விதையை அமெரிக்காவின் கோர முகத்தை அம்பல படுத்தி  தமிழக இசுலாமிய மக்கள் கொதிதொழுந்து வீதிகளில் எழுந்து போராடினார்கள் அமெரிக்கா தூதரகம்  இசுலாமிய மக்களின்முற்றுக்கைகுள் முழுமையாக வந்தது.
அமெரிக்காவை எதிர்த்து போராட்டமா..?
அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதலா? என்ன நடக்கிறது தமிழகத்தில் உலகையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர துடிக்கும் அமெரிகாவின் தூதர்களுக்கே பாதுகாப்பு இல்லையா..
இந்தியாவில் நமது ஆட்சிதானே நடக்கிறது நமது அடிமைதானே அங்கே பிரதமர் இப்பதானே நாம் சொன்னதை எல்லாம் கேட்டு அணு ஒப்பந்தம், அண்ணிய நேரடி முதலீடு என வால் ஆட்டும் நாய் போல் கேட்கும் அடிமை நாட்டில் எப்படி நமக்கு எதிராக போராட்டம்.
யோசித்து யோசித்து மண்டை பிளக்கும் தலைவலியோடு போடுடா போனை அந்த அடிமைகளுக்கு அவ்வளவு திமிரா யார் கொடுத்த தைரியம் என டெல்லி அடிமைக்கு போன் போக தமிழகத்தில் என்ன நடக்கிறது ஒரு பக்கம் அணு உலைக்கு எதிராக போராட்டம் இப்ப என்னான அமெரிக்காவுக்கு எதிரா போராட்டம் அதிலும் அணு உலைக்கு எதிரா முஸ்லீம்கள் எல்லாம் போராடுகிறார்கள் அறிக்கை கொடு என தமிழகத்தின் குருநிலத்தை ஆட்சி செய்யும் அல்லிராணியிடம் டெல்லி பேரரசு
போராட்டம் என்ற ஒற்றை சொல்லை தனது ஆட்சிகாலத்தில் எங்கும் கேட்க கூடாது வெந்ததை தின்று விதி வந்தால் சாகவேண்டும் தனது குரு நில அரசில் போராட்டமா..? அதுவும் தனது அரசின் தலைநகரிலா தன்னை கோபித்து கொள்ளாதா? டெல்லி பேரரசு தனது ஏவல் படையை அணுப்பி அமெரிக்காவின் அடாவடி செயலை கண்டித்து திரண்ட இசுலாமியர்களின் மண்டையை பதம் பார்திருக்கிறது அல்லி ராணியின் ஆடாவடி படை
தமிழகத்தில் முன் எப்போழுதும் இல்லாத அளவிற்கு தமிழக இசுலாமிய மக்கள் பொது கோரிக்கையின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள் கடந்த ஆறுமாத காலமாக தமிழக சிறைகளில் வாடி வரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் செப்.15 அண்ணா பிறந்த தினத்தில் விடுதலை செய்ய கோரி பொது சமுகத்தோடு இனைந்து போராடினார்கள் ஆனால் இந்த அரசுக்கு எம் மக்களின் கோரிக்கை சிறு அளவுகூட எட்டவில்லை அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி இன்று வரை அரசு அதற்கு எவ்வித பதிலும் கூறாதநிலைதான் இருந்து வருகிறது.
அடுத்து கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் அணு உலைக்கு எதிராக போராடும் இடிந்த கரை மக்களின் மீதான அரசவண்முறையை எதிர்த்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் இசுலாமிய அமைப்புகள் முன்னேடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரை மக்களின் தனி போராட்டம் அல்ல அது ஒட்டுமொத்த மக்களின் போராட்டம் என்ற உணர்வில் இசுலாமிய மக்களும் அதன் இயக்கங்களும் முன்னேடுத்து செல்ல இந்திய தமிழக அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய வேலையில் திடீர் என்று தமிழக கியூ பிரிவால் திருச்சியில் முஸ்லீம் பயங்கரவாதி ! கைது செய்யப்பட்டார் இந்தியாவில், தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டால் உடனே தீவிரவாதிகள் கைது செய்யப்படுவார்கள். அதை ஊடகங்களும் தங்களின் கற்பனை கதைகளை கலந்து விதவிதமாக செய்திகள் போட்டு தங்கள் பங்கிற்கு பிரச்சனையை திசை திருப்பும் வேலையை நன்கு செய்யும். ஆட்சியாளர்களே உங்கள் அரசுகளை காப்பாற்றிக்கொள்ள பலியாடுகள் முஸ்லீம்கள்தானா என்ற கேள்வியை ஒவ்வொரு இசுலாமியன் மனதிலும் நெருடிக்கொண்டிருக்கும் விடயமாகும்.
கூடங்குளம் போராட்டத்தை நசுக்க முற்படும் அரச பயங்கரவாதம் இன்று தமிழக இசுலாமிய மக்களுக்கு எதிராக லத்தியை திருப்பி இருக்கிறது பல்லாயிரகணக்கான மக்கள் கூடிய ஆர்பாட்டத்தில் கொடுரமாக தடியடி நடத்தி பல இசுலாமியர்களின் மண்டையை பிளந்து பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டுள்ளார்கள் தடியடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுரங்கபாதையில் சென்ற மக்களை சுரங்கபாதையில் வைத்து அடித்து இன்னொரு ஜாலியன் வாலாபாக்கை தமிழக காவல்துறை நடத்திக்காட்டியது.
தமிழக அரசே…!
காவல்துறையே…!
போராடும் இசுலாமியர்களை தடிகொண்டு அடக்கநினைக்காதே..
மக்களின் மேல் விழும் ஒவ்வொரு அடியும் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் உங்கள் ஆராஜக ஆட்சியின் இருதிகாலத்தை நோக்கி என்பதை புரிந்துகொள்வீர்கள்.


Thursday 14 June 2012

களம்

இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின்
விடுதலைக்காக தொடர் அரசின் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டத்தை
மாநாடாக மாற்றிய மேலப்பாளையம் மக்களும்..
அஞ்சி நடுங்கிய இன துரோகிகளும்….



அன்பிற்கினிய சகோதரர்களே…
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக அரசின் கவனத்தை ஈர்ப்பது என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் முடிவு செய்து மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தொடர் பிரச்சார இயக்கத்தை முன்னேடுப்பது என்று தீர்மாணம் செய்தோம். கடந்த காலங்களின் தொடர் படிப்பினைகளை கற்றுக்கொண்டு சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒரு தொடர்ச்சியான போராட்டம் இருந்தால் மட்டுமே அரசின் பார்வைக்கு செல்லும் என்று எண்னினோம்.
நாங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தை சேர்ந்த எமது தோழர்கள் திடீர் என்று எங்கோ வானத்தில் இருந்து குதித்தவர்களும்அல்ல…
எங்களின் இந்த போராட்டம் எங்களின் புதிய கண்டுபிடிப்பும் அல்ல..
ஏற்கனவே எமது முன்னோடி அமைப்புகள்,இயக்கங்கள்,தலைவர்கள், சமுக களத்தில் பல ஆண்டு காலமாக போராடிவருகிறார்கள் சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கைக்காக பலதளங்களில் வளிமையாக போராடியவர்கள்
இவர்களின் தொடர்ச்சிதான் நாங்கள் ஏற்கனவே நடந்த போராட்டங்களின் தொடர்ச்சிதான் எங்கள் போராட்டங்கள்….
நாங்கள் யார்…?

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒரு பொது மேடை
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒரு பொது களத்தை நாங்கள் அமைத்துள்ளோம்
எமக்கு எந்த இயக்க சார்போ, அல்லது அரசியல் சார்போ இல்லை
எமது மேடை அனைத்து இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள் என்று அனைவரையும் பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உடன்படும் அனைவரையும் ஒரே களத்தில் ஒற்றுமையாக நிற்க்கவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.
எமக்கு என்ன அக்கரை சிறைவாசிகளின்
விடுதலையில்…
இச் சமுகத்தில் சிறைவாசிகள் என்றாலே ஒரு கண்டுகொள்ளாபோக்கை நாம் கவனித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக இசுலாமிய சிறைவாசிகள் விடுதலையை பற்றி இசுலாமிய இயக்கங்கள் தாண்டி யாரும் பேசாநிலையில் ஆட்சியளர்களால் தொடர்ந்து புறக்கனிக்கப்பட்ட எம் சமுகம்
இழந்த உரிமைகளை வெல்லவேண்டும் என்ற அடிப்படையிலும், இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கையை பொது சமுகத்திடமும், மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் இவ் விசயத்தை கொண்டு செல்கிறோம்.
தனிப்பட்ட முறையில் அரசின் அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டு 16,வயதில் வேலூர் சிறையிலும், 17 வயத்தில் கோவை மத்திய சிறையிலும் பல்வேறு பொய்வழக்குகளில் தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட பலவழக்குகளை சந்தித்து 3 வருடங்கள் சிறையில் இருந்ததும், சிறையில் இருந்த நாட்களிலேயே சிறைவாசிகளின் உரிமைகளுக்காக சிறையில் போராடியதும்
நான் சிறையில் இருந்த நாட்களில் சிறையில் இருந்த இன்னும் சிறையில் இருக்கும் எம் சகோதரர்களுக்கு எம்மை பற்றி நன்கு தெரியும்.
எமக்கு விளிம்பு நிலையில் இருந்து வரும் எமது சிறை சகோதரர்களுக்காக, அவர்களின் விடுதலைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறோம், எமக்கு எந்த வித அரசியல் ஆதாயமோ, அல்லது நானோ என்னுடன் இருக்கும் தோழர்கள் பெரிய தலைவர்கள் ஆகவேண்டும் என்ற நோக்கமோ இல்லை, சிறைவாசிகளின் விடுதலைக்கான இந்த போராட்ட களத்தின் 4மாதங்களும் நாங்கள் படுவது துயரங்கள் மட்டுமே. தினம் தினம் மன உளைச்சலுக்கு ஆளாகுவது மட்டுமே
எமக்கு மிஞ்சி வருகிறது.
ஒரு கூட்டம் நடத்துவதற்கே பெரும் போராட்டங்கள் 4 கூட்டங்களை இறைவனின் கிருபையால் நடத்தி உள்ளோம்.
எங்களின் சொந்த பொருளாதாரமும்,நண்பர்களின் உதவியுடனும்,இன்னும் கருனையுள்ளம் கொண்ட பொது நபர்களின் உதவி கொண்டே இத்தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.
நான் தமிழகத்தின் சிறந்த மனித உரிமைப்போராளி வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களிடம் இளம் வழக்கறிஞராக இருந்துவருகிறேன் எனது வாழ்க்கை தேவைகளை மட்டும் பார்த்துக்கொள்வதற்கும்,இன்னும் வளமாக வாழ்வதற்க்கும் எனது வழக்கறிஞர் தொழிலில் வரும் வருமானத்தை பார்த்துக்கொண்டிருக்கலாம் எமக்கு எதற்கு இந்த தேவையற்றவேலை என்று பல நண்பர்கள் அறிவுரை கூறுகிறார்கள் ஆனால் சகோதரர்களே எல்லோரையும் போல் எம்மால் இருக்கமுடியவில்லை நாம் வாழும் காலத்தில் உண்மையாக ஏதாவது செய்துவிட்டுதான் செத்துப்போகவேண்டும் என்ற உணர்வே எம்மிடம் மேலோங்கி இருக்கிறது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் என்ற பழ மொழிக்கேற்ப
இன்று நீண்ட காலமாக பேசப்படாமல் முடங்கி கிடந்த இசுலாமிய அரசியல் சிறைவாசிகளின் அப்போராளிகளின் பிரச்சனையை நாம் முன்னேடுக்கும் போது  அரசும் காவல்துறையும் கூட அனுமதிக்கும் போது இஸ்லாமியர்கள் என்றும் தான் இறைவழி நடப்பதாகவும் கூறிக்கொள்ளும் சிலர் எமது தொடர் போராட்டங்களுக்கு இடையூறு செய்வதின் மர்மம் எமக்கு புரியவில்லை
இவர்கள் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் அக்கரை கொண்டவர்களா..? என்ற சந்தேகமும். இவர்கள் சிறைமீள்வதில் விருப்பம் அற்றவர்களாகவே இருப்பார்களோ என்ற என்னம் எம்மிடம் தோன்றுகிறது.
நாம் எவருக்கும் போட்டியாக இயக்கம் நடத்தவில்லை,எம்மை வளர்த்திக்கொள்வதற்கும் இயக்கம் நடத்தவில்லை சிறைவாசிகள் பெயரை கொண்டு பொருக்கிதிங்கவும் சிறைவாசிகளின் விடுதலையை கோரவில்லை
எமது என்னம் தூய்மையானது எமக்கும் எம் இறைவனுக்கும் மட்டுமே
தெரியும்.
நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளுக்கும் அரசின் பொது மண்னிப்பில் மட்டுமே விடுதலை என்று நிலையில் இருக்கும் சகோதரர்களுக்காக அரசின் பொது மண்னிப்பை வேண்டியும், செப்,15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யவேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கை மட்டுமே நாங்கள் வைக்கிறோம் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழகத்தில் அறியப்படதக்க அரசியல் கட்சி தலைவர்கள், இசுலாமிய இயக்கங்களின் தலைவர்களை அழைத்து இக் கோரிக்கைகளை வழியுறுத்தி பேச மேடை அமைக்கிறோம், யார் ஒருவருடைய பிழைப்பிளும் நாங்கள் கைவைக்கவில்லை இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் முட்டுக்கட்டை போடுபவர் எவரும் உண்மையான முஸ்லீமாக இருக்கமுடியாது என்று தின்னமாக நம்புகிறோம்.
இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான எமது பயணத்தில் குழப்பம் விழைவித்தாளோ அல்லது அவதூறு செய்தாளோ நாம் இனி பொருத்துக்கொண்டிருக்கமாட்டோம் இனி அனைத்து விசயங்களைப்பற்றியும் பேசவேண்டுயது இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம் நாங்கள் எங்களின் வழியில் தூய்மையான நோக்கத்தோடு, போராட்டகுனத்தோடு பயணம் செய்கிறோம் வழக்கமாக நீங்கள் செய்வதை செய்து கொண்டிருங்கள். எழுந்து வரும் இப்போராட்ட அலையை உங்களால் முடக்கமுடியாது எங்களால் இயன்றவரை நாங்கள் போராடுவோம்,
எங்களில் கடைசி ஒரு நபர் இருக்கும் வரை எங்களின் இப்போராட்டம் ஓயாது. எங்களால் 1000 நோட்டீஸ் மட்டுமே அடிக்கமுடியும் என்றால்கூட
ஒவ்வொறு வீடாக கதவை தட்டி இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளுக்காக அவர்களின் விடுதலைக்காக நாங்கள் பேசுவோம், பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம்…
அரசு செய்யாத செயலை, பாசிஸ்டுகள் செய்யாத செயலை செய்யும் நீங்கள் நிச்சயம் பெரியவர்கள்தான் ஒப்புக்கொள்கிறோம். உங்கள் முன் எங்கள் தோழ்வியை ஒப்புக்கொள்கிறோம்.
இச்சமுகம் என்று ஒன்று பட போகிறது…..
ஒரே பார்வை ஒரே கொள்கை என்று வரப்போகிறது.
ஏக்கங்களுடன்…..

நன்றியும் நேசிப்பும்
நாம் தொடர் கூட்டங்களை கடந்த மார்ச் முதல் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே திருபூர்,கோவை, மக்கள் மன்றம் ஆதரவுடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மேலப்பாளையம் என்று தொடரும் எமது கோரிக்கை போராட்டம் இறைவனின் மாபெரும் கிருபையால் மேலப்பாளையத்தில் முன் எப்போழுதும் இல்லாத அளவிற்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. நாம் பொதுக்கூட்டம் என்றுதான் அறிவித்தோம் ஆனால் மக்களும் இறைவனும் அதை மாநாடக மாற்றினான் எல்லா புகழும் இறைவனுக்கே..
இந்த நிகழ்வில் எம்மோடு இனைந்து களமாட முடியாவிட்டாலும் புலத்தில் இருந்து எமக்கு ஆதரவாக எமக்கு ஆலோசனைகளை அளித்து வரும் எமது அன்பு சகோதரர் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் அரசியல் நெறியாளர் வேங்கை இப்ராஹீம்….
இக் கூட்ட நிகழ்விற்கு ஆரம்பம் முதலே அதரவு அளித்து வரும் மனித நேயமக்கள் கட்சியின் பொதுச்செயளாலர் சகோ. தமிமுன் அன்சாரி. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறுமை அண்ணன் திருமாவளவன். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற உறுப்பினர் அறுமை தோழர். தனியரசு. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அறுமை சகோதரர் ஜே.எஸ்.ரிபாயி,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் அறுமை அண்ணன் செந்தமிழன் சீமான். இந்திய தவ்ஹீத் ஜாமாத் தலைவர் அறுமை அண்ணன் எஸ்.எம்.பாக்கர்.பொதுச்செயலாளார் அறுமை சகோ.செங்கிஸ்கான்,சிறுபான்மை உதவி அறக்கட்டளை சகோதரர்கள். சம்சுதீன்,புகாரி, மே17 இயக்கதோழர் திருமுருகன். மக்கள் உரிமைக்கழகம் தோழர் வழக்கறிஞர் புகழேந்தி. தடா.ரஹீம், புரட்சியளர் பழனிபாபாவின் வழக்கறிஞர் வேங்கை சந்திரசேகரன். பேரா.தீரன்,பேரா.ஜவாஹீருள்ளாஹ்.தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம். சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆப் இந்தியா நிர்வாகிகள்.பாப்புலர் பார்ட்டி ஆப் இந்தியா நிர்வாகிகள், இன்னும் இன்னும் ஏராளமான நல் உள்ளங்களுக்கும்.
மேலப்பாளையத்தில் எமக்கு உதவிகரமாக இனைந்து களமாடிய சிறுபான்மை உதவி அறக்கட்டளை தோழர்கள், மனித நேயமக்கள் கட்சியின் மாவட்ட செயலர்.அறுமை சகோ.ரசுல்மைதீன். அவரின் குழுவினர். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருப்பாளர் வழக்கறிஞர் செந்தில். அறுமை சகோ.நெல்லை சிவா, பெரியார் திராவிடர்கழகதோழர் அகரன். இன்னும் இன்னும் ஏராளமான நல் உள்ளங்களுக்கும்….
இந் நிகழ்வுக்கு எமக்கு பொருளாதர உதவிகள் செய்த சகோதரர்களுக்கும்…

இனையத்தின் வாயிலாக களமாடிய எமதறுமை சகோதரர்கள் சர்புதீன், பாலகுமார்,தமிழ்பிரியன் செந்தில், பாசில்,முத்துப்பேட்டை முகைதீன்,ஜாபர்சாதிக்,மருதநாயகம் கனேசன்,பாலகார்த்தி பீர் மரைக்காயர், சாந்திமாதவன்,தமிமுல் அன்சாரி, இன்னும் இன்னும் பல தோழர்களுக்கும்…
எம்மோடு இனைந்து களமாடிய இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர்களுக்கும்…
எமது நன்றியும் நேசிப்பும்…
 ஆயிரம் தடைகள் வந்தாலும் தொடர்ந்து களமாடுவோம்…
ஆயிரம் முறை வீழ்வோம்
ஆயினும் ஒர் நாள் வெல்வோம்….
அனைத்து சதிகளையும் முறியடிப்போம்
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும்
மீட்டேடுப்போம்…
இது தனி நபர்கள் சார்ந்த பிரச்சனை அல்ல
ஒரு சமுகத்தின் மறுக்கப்பட்ட உரிமை

சே.ஜெ.உமர்கயான்.
தலைமை ஒருங்கினைப்பாளர்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தமிழ்நாடு


Sunday 20 May 2012

என்ன செய்யவேண்டும் நாங்கள்….


 
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக உங்களிடம் பேசுகிறேன்

எமதமைப்பானது உலகில் எங்கு மக்கள் இனத்தின் பெயரால், மொழியின்பெயரால்,இனவெறிக்கும்,மதவெறிக்கும் பாதிக்கப்படுகிறார்களோ அம் மக்களுக்காக அவர்களின் குரலாக, அவர்களுக்காக பேச வேண்டும்,போராடவேண்டும் என்ற உயரிய நோக்கோடு நாங்கள் செயல்பட்டுவருகிறோம். நாங்கள் என்றால் நீங்கள் எண்ணுவது போல் பெரும் கூட்டமல்ல உணர்வு மிக்க சில இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட        இவ்வமைப்பானது இன்று தமிழகத்தில் பெரிதாக கண்டுகொள்ளப்படாத   சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்ட களத்தை பொதுசமூகத்திடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கையோடு களமாடி வருகிறோம். சிறைவாசிகளின் விடுதலை என்ற ஒற்றை முழக்கத்தோடு அனைத்து தரப்பு மக்களையும்,இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுமேடையாக நாங்கள் செயல்பட்டுவருகிறோம். எங்களுக்கான தனிப்பட்ட அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை.
அனைத்து அரசியல்,சமூக இயக்கங்களை ஒன்று படுத்தி சிறைவாசிகளின் விடுதலைக்கான தமிழக சூழலில் ஒரு களத்தை அமைத்துள்ளோம். நாங்கள் ஒரு சார்பான அரசியலையோ,கொள்கைகளையோ முன்னெடுப்பவர்கள் அல்ல.
இப் பின்னணீயில் இருந்துதான் நாங்கள் தமிழகத்தில் போதுமான அளவு கவனம் கொள்ளாத சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கைகளுக்காக மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான தொடர் அரசின் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறோம். இதுவரை திருப்பூர்,கோவை என இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளோம். பொதுதளத்தில் இருந்தும்,இசுலாமிய அமைப்புகளிடம் இருந்தும் இந்நிகழ்விற்கான ஆதரவு சிறப்பாக இருந்து வருகிறது.
இத்தொடர் கூட்டங்களுக்கான செலவு மிக கடுமையானது. எங்களின் சொந்த உழைப்பில் இருந்தும், எங்கள் நண்பர்கள்,தோழர்கள் உதவியுடன் இந்நிகழ்வுகளை நடத்திவருகிறோம். ஆனாலும் போதுமான பொருளாதார பலம் இன்றி சோர்வுகள் வந்தாலும்
துணிவோடு அணியாகி போராடு
நீ அழிவாகி போனாலும் வரலாறு
 என்ற நம்பிக்கையோடு போராடுகிறோம். இது எம்மை பற்றிய சிறு அறிமுகம் தோழர்களே.
ஆனாலும் மனம் வாடிய நிலையில் என்ன செய்ய போகிறோம்
எமது போராட்டம் போதுமானதா?
எமது சகோதரர்களின் விடுதலையை எப்படி வென்றெடுக்கப்போகிறோம்.
நாம் மட்டும் சடங்காக சில பொதுக்கூட்டங்களை நடத்தினால் எமது போராட்டம் வெல்லுமா? என்ற கேள்விகளுடன் தொடங்குகிறேன்….

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து
அரசியல் சிறைவாசிகளின் விடுதலையை மக்களிடம்
கொண்டு செல்வோம்
செப்.15 அவர்களின் விடுதலையை வென்றெடுப்போம்…!
ஆம் இதுதான் நமது முழக்கம்
தமிழக அரசியல் களத்தில் இன்று பேசப்படும் ஆனால் போதுமான அளவு பேசப்படாத செய்தியாக இசுலாமிய,அரசியல், ஆயுள்சிறைவாசிகளின் விடுதலை குறித்த செய்தியாக இருந்துவருகிறது.
சிறைவாசிகளின் விடுதலைக்கான ஒரு தொடர் ஓட்டத்தை நாங்கள் பொது சமூகத்தில் தொடங்கிவைத்துள்ளோம்.
அது பொது சன பார்வையை, அரசின் பார்வையை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சிறைவாசிகளின் விடுதலைக்கான ஏக்கங்களை பிரதிபளிக்கும் வகையில் நாம் முன்னெடுத்துள்ளோம்.

அன்பானவர்களே….
உங்களின் மனம் கனிந்த பார்வையை
பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள்,சாதிய கொடுமைக்கு எதிராக களமாடி சிறை சென்ற தலீத் விடுதலைபோராளிகள், ஆத்திரத்திலும்,சூழல்காரணமாகவும் சிறைபட்ட ஆயுள் சிறைவாசிகளின் மீது சற்று திருப்புங்களேன்.
உங்களின் இதயத்தை திறந்து சிறைவாசிகளின் துயரத்தை கேளுங்களேன்.

சிறையும்,தண்டனையும்
ஒரு குற்றத்திற்க்கு தண்டனையாக ஒருவருக்கு சிறைதண்டனை,
மரணதண்டனை, ஆயுள்சிறை,அபராதம் விதித்தல் போன்றவை இந்திய தண்டனை சட்டம் குற்றத்திற்க்கு ஏற்ப வகைப்படுத்துகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் தண்டனைகளுக்கான நோக்கத்தையோ
அல்லது தண்டனைக்கு பின்னிட்ட அந்த நபரின் வாழ்க்கையை பற்றியோ எதுவும் கூறாததுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது.
இந்திய தண்டனை சட்டங்கள் பெரும்பான்மையானவை அடிமை இந்திய சட்டங்களே, காவல் சட்டம்,தண்டனைச்சட்டங்கள் தற்போதைய சமூகவாழ்வு முறை, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படவில்லை இந்நிலையில் இருந்தே குற்றம் அதற்க்கு பகரமாக விதிக்கப்படும் தண்டனைகளையும் நாம் பார்க்கவேண்டும்.
குற்றமும் அதற்க்கு காரணமான சமூக பொருளாதார,மற்றும் மக்களுக்கான போராட்டங்களினால் தளைப்படுத்துவதையும் பார்க்காமல் ஒருவரின் முடிவில்லா சிறைவாழ்வை தீர்மாணிப்பது எவ் வகையில் நியாயம் என்பது விளங்காத புதிர்.
ஒரு குற்றம் என்று வரையருக்கும் நீதிமன்றங்கள் தண்டனை விதிப்போடு தனது கடமையை முடித்துக்கொள்கிறது.
அதற்க்கு பின்னிட்ட நாட்களில் சிறைப்பட்ட சிறைவாசியின் முழு வாழ்வு முறையை தீர்மாணிப்பது சிறைச்சாலையும் அதனைகோளேச்சும் சிறைதுறை அதிகாரிகளும்தான்.

ஒருவரை ஆயுள் முழுவதும் சிறைவைப்பது அவரின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துவது.
அவருக்கும் சமூகத்திற்க்குமான தொடர்பை அறுத்துவிடுவதும்.  அவர் தன்னுடைய குடும்பத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தடுப்பதும்.
சிறைவாசியின் மனம் சார்ந்த, உடல் சார்ந்த அனைத்தையும் தடுப்பதும்
மொத்தத்தில் செத்த பிணத்திற்க்கு சமமானதும் ஒன்றுதான்.
ஆம் நண்பர்களே சிறையில் வாடிவரும் சிறைவாசிகள் இறந்தவர்களை போல்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
முடிவில்லா சிறைவாசத்தால் அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை அவர்கள் குடும்பம்,மனைவி,குழந்தைகள் உறவுகள் என்று பாதிப்புகள் ஏராளம்.
சர்வதேச நாடுகளும் ஐ.நா மன்றமும் மனித உரிமைகள் பற்றியும், குழந்தைகளின் உரிமைகளை பற்றி பேசும் அதேவேளையில் சிறைப்பட்டவர்களின் குடும்பம், குழந்தைகளின் உரிமைகளும் அவர்களின் எதிர்காலம் பற்றி யார்பேசுகிறார்கள் இங்கு குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படவில்லையா?
அரசுகள் இவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்கிறதா?
சிறைப்பட்டவர்களின் குடும்ப நிலை குறித்தான பார்வையும், விவாதங்களும்
எழுப்பப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் இன்னும் கேட்கப்படாமலேயே உள்ளது.
 இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான தொடர் போராட்டங்கள்
தமிழகத்தில் மத வெறியாட்டமும் அதற்க்கு எதிரான இசுலாமியர்களின் எதிர்வினைகளினால் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் காவல்துறையின் கோரத்தாக்குதல்களுக்கும்,பொய் வழக்கினால் சிறைப்பட்டும் அவதியுற்றனர்,
ஒரு ஊரில் சரி பாதி இசுலாமிய மக்கள் போலீசின் பயங்கரவாத,தீவிரவாத பூச்சாண்டி அச்சுறுத்தல்களுக்கு ஆட்ப்பட்டார்கள்.
இயக்கம், அரசியல் என்று மக்களோடு களமாடிய பெரும்பான்மையான இசுலாமிய இளைஞர்கள் ஏதோ ஒரு வழக்கில் சிறைக்குப்போனவர்களாகவே இருந்தார்கள் சிறைக்கு போகாதவர்கள் கொஞ்சமே இதில் சிறுவர்கள் கூட தப்பவில்லை.
இசுலாமியர்களை பொது சமூகம் பார்த்த பார்வையே நீங்கள் எல்லாம்
தீவிரவாதிகளா என்று பார்க்கும் அவல நிலையை அரசும்,காவல்துறையும்
கேடுகெட்ட தினமலம் போன்ற ஊடகங்களும் கற்பிதம் செய்ததின் விளைவாக தமிழகத்தில் இசுலாமிய மக்களின் அன்றாட வாழ்வியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இவ் அடக்கு முறைகளுக்கு எதிராக போராடிய இசுலாமிய களப்போராளிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சிறைப்படுத்தப்பட்டார்கள் அவர்களின் விடுதலைக்கான போராட்டம்தான் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
அன்றுமுதல் இன்றுவரை சிறையில் வாடிவரும் இவர்களின் வாழ்வு சிறையிலேயே கழிந்து விடுமோ…?
சரியும்,தவறுமாக பல்வேறு வடிவில் களமாடிய இவர்கள் தங்களின் குடும்ப நலன்,தன் சுயநலனுக்காக சிறை செல்லவில்லை
சமுக களத்தில் கண்டுகொள்ளப்படாத பிரச்சனையான இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கை
நாம் என்ன செய்யப்போகிறோம்

தமிழ்தேசியர்களே..
இடதுசாரிகளே..
சனநாயகபோராளிகளே..
இசுலாமிய சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள்,ஆயுள்சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன..?
தலைவர்கள்,முன்னணியாளர்கள் இவர்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்டு ஆதரவு அளித்தாலும் பெரும்பான்மையான தோழர்கள் சிறைவாசிகளின் அவலநிலையை ஏன் பேசுவதில்லை அதிலும் குறிப்பாக இசுலாமிய,அரசியல் சிறைவாசிகள் விடுதலைவிசயத்தில் ஏன் பாரமுகம் தோழர்களே
இந்த தேசத்தின் வளர்ச்சியில், உயர்வில் தியாகங்கள் புரிந்த இசுலாமிய சமுகத்தின் அவலக்குரல் உங்கள்காதுகளுக்கு எட்டவில்லையா..?
2008ம் ஆண்டு 1,400க்கும் மேற்பட்ட ஆயுள்சிறைவாசிகளை செப்.15 அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்தபோதும்கம்யூன் வழக்குகள்,” () சமூகவழக்குகள் என்று குறிப்பிடப்பட்டு இசுலாமிய சிறைவாசிகளுக்கும் மட்டும் சிறப்பு அரசாணைகள் பிறப்பித்து கடந்த ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்பட்டதே இன்றும் மதசிறுபான்மை மக்கள் என்பதால் பாரபட்சம்காட்டப்படுகிறதே
சட்டத்தின் பெயரால் ஒரு பெரும் அநீதி இழைக்கப்படுகிறதே
இதைபற்றிய உங்கள் பார்வை என்ன..?
கடல்கடந்தும்,நாடுகள் கடந்தும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக ஒன்றிணைந்து போராடும் நீங்கள் தமிழகத்தில் இசுலாமிய சிறைவாசிகளுக்கு எதிராக நடந்துவரும் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைய மாட்டீர்களா..?
இவர்களின் விடுதலைக்கான ஆதரவு போராட்டத்தில் உங்கள் குரலும் இணைந்து ஒலிக்காதா…?

எனதருமை இசுலாமிய உறவுகளே…!
கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களில் தமிழகத்தில் ராஜீவ்கொலைவழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக மரண கொட்டடியில்
இருந்துவரும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோருக்கு மரணதண்டனை
உறுதிப்படுத்தியவுடன் எழுந்த எழுச்சிகரமான போராட்டங்கள் வரலாற்றின் பக்கங்களில் வீரம் நிறைந்த மக்கள் போராட்டத்தின் வெற்றியாக பதிக்கப்பட்டது. அவர்களின் மரணதண்டனையை நீக்ககோரி தமிழகம் எழுந்தது எழுச்சியுற்றது. மாணவர்கள்,இளைஞர்கள்,வழக்கறிஞர்கள்,பொது சனம் என்று அனைத்துதரப்பு மக்களும் வீதிக்கு வந்தவுடன் தமிழக அரசும் கொலைவெறிகொண்டு இருந்த மத்திய அரசும், திகைத்து நின்றது.
போராட்டத்தின் உச்சமாக காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றப்போராளி செங்கொடி தன்னைதானே மாய்த்துக்கொண்டாள் நீதிமன்ற காதுகளுக்கும் அரசு இயந்திரங்களுக்கும் பேரிடி தந்தாள் அசையாத அரசு நாற்காலிகள் கூட அசைந்தது நீதிமன்றங்கள் கூட தனது இதயத்தை திறந்தது.
மூன்றுதமிழர்களின் தூக்கு நிறுத்தப்பட்டது.
இப்போராட்டங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டாமா..?
பல்வேறு இயக்கங்கள் சிறைவாசிகளின் விடுதலைக்காக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடத்தினார்கள் அவர்களின் போராட்டங்களை நாம் மதிக்கிறோம் ஆனால் அது போதுமானதா?
அனைவரும் ஒரே அணியில் ஒற்றுமையுடன் நின்று போராடி இருந்தால் ஒருவேளைஇசுலாமிய சிறைவாசிகள் விடுதலை சாத்தியப்பட்டிருக்குமோ ?
என்ற கேள்வியும் வேதனையுடன் எழுவதை தவிர்க்கமுடியவில்லை ஆனாலும் காலம் கடந்துவிடவில்லை இனியேனும் ஒற்றுமையுடன் ஒரே குரலில் களம் காணவேண்டிய காலகட்டம் இது.
இயக்கங்கள்,அதன் உறுப்பினர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்தினால் போதுமா? மக்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு இல்லாமல் எந்த போராட்டங்களிலும் வெல்லமுடியாது.
எப்போழுது ஒன்று சேரப்போகிறீர்கள்…?
சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேல்வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் அநாதைகளா?
மக்களுக்காக சமுகத்திற்க்காக போராடி சிறைசென்ற இசுலாமிய சகோதரர்கள்
சிறையிலேயே செத்து மடியவேண்டுமா?

கோவைமத்தியசிறையில் SLE என்னும் அறியவகை நோயால் மரணநாட்களை தினம் தினம் எண்ணிக்கொண்டிருக்கும் அபுதாஹீரின் விடுதலைக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்..?
அவனின் மரணமாவது சுதந்திரமாக இருக்கட்டுமே என்று நினைக்கப்போகிறீர்களா?
இல்லை சிறையிலேயே செத்து மடியவிடப்போகிறோமா..?
இரண்டு சிறுநீரகமும்பாதிக்கப்பட்டு இதயநோயாலும் கண்பார்வை மங்கிய நிலையில் அபுதாஹீர் இன்று மரணவாசலில் இசுலாமியன் என்றகாரணத்தாலே சட்டங்கள்கூட பாரபட்சம்காட்டுகிறதே இதற்க்கு என்ன செய்யப்போகிறோம்.
 இது சிறைவாசிகள் மீட்பு பிரச்சனை மட்டுமல்ல
ஒரு சமுகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டம்.
அரசின் அடக்குமுறையை, அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து தீக்குளித்து எகிப்தில்இறந்தான் இளைஞன் ஒருவன் அவனுக்கு குறிப்பிட்டநாளில் அஞ்சலி செலுத்தவாருங்கள் என்று முகநூலில் எழுதினால் பெண் ஒருவள்
மக்கள் ஒன்றுதிரண்டார்கள் போராட்டகளம் அமைத்தார்கள் எகிப்தில் ஆட்சி மாற்றமே ஏற்ப்பட்டது.
சிறைவாசிகளின் விடுதலைக்கான களம் அமைத்து இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கையோடு செப்.15 அன்று விடுதலை செய்யக்கோரி அரசின் கவன ஈர்ப்பு பொதுநிகழ்வுகளை நடத்திவரும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக உமர்கயான் இணையம் வாயிலாக உங்களுக்கு கோரிக்கைவைக்கிறேன் ஒன்றுதிரளுங்கள் இது இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கைமட்டுமல்ல
மதபேதத்தால் ஒரு சமூகம் புறக்கணிக்கப்படுகிறது. புறக்கணிக்கப்பட்ட சமுகத்தின் உயிர் பிரச்சனை.
அரசின் கவனத்தை மட்டுமல்ல உங்கள் கவன த்தையும் ஈர்க்க
நாங்கள் என்ன செய்யவேண்டும்….?

எகிப்தில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தீக்குளித்து எழுச்சி ஏற்பட காரணமாக இருந்தானே ஒரு இளைஞன்
அவனைபோல்……
தமிழகத்தில் மூன்றுதமிழர்களின் மரணதண்டனையை நிறுத்த கோரி
தீக்குளித்து மாண்டாளே பழங்குடியின போராளி செங்கொடி
அவளைப்போல்….
 இசுலாம்தற்கொலையை கூடாது என்கிறது
எழுச்சிகொள்ளாத என் சமூகத்தை எழுச்சி கொள்ள செய்ய
ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க
அரசின்பாரபட்ச போக்கால் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும்
இசுலாமியசிறைவாசிகளின் விடுதலைக்காக
நாங்கள் என்ன செய்யவேண்டும்….
நாங்கள் என்ன செய்தால்
நீங்கள் எழுச்சிகொள்வீர்கள்



1.10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும்
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரி அணிதிரளுங்கள்.

2. மத பேதம் பாராமல் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை எதிர்வரும் செப்டம்பர்15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை கோரி அணிதிரளுங்கள்.

3. இசுலாமிய சிறைவாசிகள்10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை களைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோருகிறோம்.

4.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை கோரி அணிதிரளுங்கள்.

5. மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.

6.அனைத்து சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிக்காவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என  தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

7.இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிறப்பித்த அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

8.சிறையில் இனம்புரியா நோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய கோரி அணிதிரளுங்கள்.

9. சாதிய வன் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும், ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்ய கோரி அணிதிரளுங்கள்.

10.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட
கொடுமையான முகாம்களில் அடைத்து வைத்துள்ளதை எதிர்த்து அணிதிரள்வோம்.

சே.ஜெஉமர்கயான்.
ஒருங்கிணைப்பாளர்.
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.,
தமிழ்நாடு.