Saturday 4 June 2011

உள்மனஓசைகள்

உள்மனஓசைகள்



இது
சிறகைத்தொலைத்துவிட்ட
சின்னப் பறவையொன்றின்
உறவின் பரிபாசை
உள் மனதின் தனி ஓசை...

பாலைவனச் சோலை ஒன்றில்
பாடவந்தமனக்குயிலின்
பாசையில்லா ராகமிது...!

அடிவானிற்க்கப்பாலும்
அக்கினியின்ரேகைகளாய்

நீண்டு.... தொடர்கின்ற
நொடும்பாலைச் சூனியங்கள்..

இருட்டேழுதும் துயர்வேளை
இடர்சூழ்ந்த மனற்பாலை
குருட்டு மன ஒட்டகத்தின்
கூன் முதுகில் சஞ்சாரம்....!

புழுதி புயலடித்துப்
புலப்படாதவெட்டவெளி
இதயப்பயனி ஒன்று
இலைப்பாற என்ன வழி...

எட்டுதிக்கும் கானலென்றால்
ஈச்சமரம் கான்பதெங்கே..?
 உச்சிவெயில் தோழுரிக்க
உடைமுள்ளோ கால் துழைக்க
அத்துவானப்பொட்டலிலே
அண்டநிழல் பார்பதேங்கே...?

நெருப்புகோழிகளாய்
தலைநிமிர்ந்து வரும்
   நினைவுகலை
துயர வேட்டைக்கரன்
துரத்தையிலே என்ன செய்ய..?


மறதி மணல் வெளியில்
மனசை புதைத்திடவோ..?

மனதின் கனவுகளை
மறுபடியும் சிதைத்திடவோ...?


சொல்தோழி சொல்

சொற்களுக்கும் சிறை என்றால்..


என் உள் மன ஓசைகள்
இனி
உருகி உயிர்த்தோடும்
 பாலைவனத்தில்
பட்டுநிற்க்கும்
ஈச்சைகள் உயிர்பெரும்

விழிச் செடிகள்
கண்ணீர்பூக்கும்.....

    உமர்கயான்.சே



 

சனநாயகம்


 சனநாயகம்



அரிசியை சிந்திவிட்டு
உமிக்காக அடுப்பெரிக்கும்
முதுகிலே கண்முளைத்த
நாட்டில்....!

வேட்டியை விற்றுவிட்டு
நிர்வாணத்திடம்
கோவனத்திற்காய்
ப்ல்லிளிக்கும்
கூனல் சனநாயகம்...

இங்கே.!
விளையாட்டுப்போட்டிக்கும்
பலகோடி

சடடமன்ற்த்தில்
தலையாட்டும்
போட்டிக்கும் பலகோடி
வாக்களித்தமக்களுக்கோ
தெருக்கோடி....!


மின்மினிகள்
கண்ணடிக்க-இங்கே
தாரகைகள் எங்கோ
தலைமறைவாய் வாழும்...

கூழாங்கற்களின்
குன்று மூலையின் கீழ்
வைரத்துண்டுகள்-பாவம்
வருமை பள்ளத்தின்
வயிற்று மடிப்பில்
இடிகளின் வயிற்றில்
பிடுங்கப்பட்ட
மின்னல்கொடிகள்...!

அடடா
ஆதிக்கசர்க்காரின்
அதிகாரகழிப்பறையின்
பாதிக்கப்பட்ட
துடைப்பங்களாய்...

எரிதழல்வேலேடுத்து-தம்பி
இருட்டை கீற வாடா
எதிர்கால கனல் மழைக்காய்
நீயின்றே ஏந்தடா
நெருப்புபந்தம்...

சதிகார சர்க்காரின்
அதிகாரசாவுக்குப்ப்னியும்
சமுதய சந்தையின்
சத்தில்லா மந்தையா நீ?

கொதிக்கும் இரத்தத்தில்
குளித்து வரும் கூர்வேலே-நீ
 புலிகளையும் எலிகளாக்கும்
புதிய பொருளாதார மோகினியின்
பொய் முகத்திரை கிழிப்பாய்...!

எச்சரிக்கை என்று-நீ
உச்சரிக்கும் ஓசை உரசலில்
உதடுகளே தீபற்றட்டும்
அந்த அக்கினி புயல் நாக்கின்
அனலை சுவாசித்து
ஆகாசகோபுரங்கள்
  தீபிடிக்கும்.....

இனியும் இங்கே..
ஏழைகளின் இரத்தத்தில்
ஏகபோக அத்தர் எடுத்தால்
பிறளயங்கள் ஏற்ப்பட்டு
பேதங்கள் தூளாகட்டும்

பீட பூமி தாழ்ந்து
பிறக்கட்டும் சமதர்மம்.......!

               உமர்கயான்.சே








சிறை


சிறை




சிறைகளின்
செங்கற்க்களில்

மனித உரிமைகளும்
பூசிமெழுகப்பட்டவையே.....

பூட்டிய கம்பிகளுக்குள்
புதைக்கப்பட்ட உனர்வுகள்

பாரா ஊசார்
காவலர்களின் ஓசை
இருட்டைக் கிழித்து வரும்.....

மனித கழிவுகளை
மனிதன் அகற்றக்கூடாது
காகிதச் சட்டங்கள்,.....

இங்கே எங்களின்
விடிவே..!
மூத்திர சட்டியின்
முகத்தில்தான்.....!

விடிவுக்கு இங்கே
விடியல் இல்லை
விதிகளுக்கிங்கே இடமில்லை...
வருடங்கள்
வறட்சியாய் போகும்...

தண்டனைக்கு பின்தான்
விசாரனைகள்.....
குருகிய இடத்தில்
கூனியாய் சட்டங்கள்...

செவ்வாய் கிழமைகள்
மனு[ஆ]நீதிநாள்
மனுக்கள் இங்கே குப்பையில்

துரையிடம் என்னட..?
“ரிப்போர்ட்
கொடுவாள் மீசைகளின்
கொடுமைகள்....

எல்லா நாட்களிலும்
எங்கள் விடுதலையை
எதிர்ப்பார்த்த ஏக்கங்கள்....

நரகம் எப்படி இருக்கும்..?
 சிறைச் சாலையின்
மதில்களுக்குள்
ஒருமுறை வந்துபாருங்கள்..

எங்களுக்கு
வசந்தங்கள்
வசப்படவில்லை...

வசந்தங்கள்
வழி விடும்

சிறைகதவுகள்
தெறிக்கும்
மக்கள் புரட்சியில்...



              உமர்.சே