Saturday 4 June 2011

சிறை


சிறை




சிறைகளின்
செங்கற்க்களில்

மனித உரிமைகளும்
பூசிமெழுகப்பட்டவையே.....

பூட்டிய கம்பிகளுக்குள்
புதைக்கப்பட்ட உனர்வுகள்

பாரா ஊசார்
காவலர்களின் ஓசை
இருட்டைக் கிழித்து வரும்.....

மனித கழிவுகளை
மனிதன் அகற்றக்கூடாது
காகிதச் சட்டங்கள்,.....

இங்கே எங்களின்
விடிவே..!
மூத்திர சட்டியின்
முகத்தில்தான்.....!

விடிவுக்கு இங்கே
விடியல் இல்லை
விதிகளுக்கிங்கே இடமில்லை...
வருடங்கள்
வறட்சியாய் போகும்...

தண்டனைக்கு பின்தான்
விசாரனைகள்.....
குருகிய இடத்தில்
கூனியாய் சட்டங்கள்...

செவ்வாய் கிழமைகள்
மனு[ஆ]நீதிநாள்
மனுக்கள் இங்கே குப்பையில்

துரையிடம் என்னட..?
“ரிப்போர்ட்
கொடுவாள் மீசைகளின்
கொடுமைகள்....

எல்லா நாட்களிலும்
எங்கள் விடுதலையை
எதிர்ப்பார்த்த ஏக்கங்கள்....

நரகம் எப்படி இருக்கும்..?
 சிறைச் சாலையின்
மதில்களுக்குள்
ஒருமுறை வந்துபாருங்கள்..

எங்களுக்கு
வசந்தங்கள்
வசப்படவில்லை...

வசந்தங்கள்
வழி விடும்

சிறைகதவுகள்
தெறிக்கும்
மக்கள் புரட்சியில்...



              உமர்.சே

No comments:

Post a Comment